செய்திகள் :

கொல்கத்தா: போலி ஆதார், ரேஷன் கார்டுடன் கைதான வங்கதேச நடிகை சாந்தா பால்; விசாரணையில் பகீர் தகவல்

post image

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது செய்து அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தி வருகிறது.

கொல்கத்தாவில் அதிக அளவில் போலி ஆவணங்களுடன் பங்களாதேஷ் பிரஜைகள் வசிக்கின்றனர். மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் பங்களாதேஷ் பிரஜைகள் தென்மாநிலங்களுக்குள் கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர்.

சாந்தா பால் என்ற பெண் அது போன்று சட்டவிரோதமாக கொல்கத்தாவில் வசிப்பது தெரிய வந்தது. பங்களாதேஷைச் சேர்ந்த அவர் ஏர்லைன்ஸ் ஒன்றில் வேலை செய்து வந்தார். அதோடு மாடலாகவும், சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து போலி ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023ம் ஆண்டு பங்களாதேஷ் பாஸ்போர்ட்டில் இந்தியாவிற்கு வந்த சாந்தா பால் கொல்கத்தாவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

சாந்தா பால்
சாந்தா பால்

வீட்டு உரிமையாளரிடம்தான் ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டதால் தனது குடும்பம் அதிருப்தியில் இருப்பதால் அவர்களிடமிருந்து விலகி இருக்க விரும்புவதாகத் தெரிவித்தார். வாடகை ஒப்பந்தம் கையெழுத்திடும்போது போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். அதோடு ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் மொகமத் அஸ்ரப் என்பவரைக் கடந்த ஜூன் மாதம் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

உள்ளூர் ஏஜெண்ட் ஒருவர் மூலம் போலியாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களை எடுத்துள்ளார். அவரது கணவர் அஸ்ரப் கப்பலில் வேலை செய்கிறார். 2016ம் ஆண்டு அழகிப்போட்டியில் பங்களாதேஷ் பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார். அதோடு 2019ம் ஆண்டு குளோபல் மிஸ் ஆசியா அழகிப்பட்டத்தையும் வென்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் மற்றும் பெங்காலிப் படங்களில் நடித்திருக்கிறார். அதோடு ஒடிசா படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆரம்பத்தில் மாடலிங்கில் ஈடுபட்டிருந்தார். அதில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் பங்களாதேஷ் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாகவும் பணியாற்றி வந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னை: தினமும் பாலியல் டார்ச்சர் - இளைஞரை சிக்க வைத்த இளம்பெண்

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது அவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திர... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: "எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாவு" - கணவன் தற்கொலை; காதலனுடன் வெளியேறிய மனைவி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் (45). கூலித்தொழிலாளரான சர்வேஷ் மனைவி ரிங்கி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் அதே தெருவில் ஹகீம் என்பவருடன் ரி... மேலும் பார்க்க

ஜூஸில் பூச்சிமருந்து கலந்து ஆண் நண்பனைக் கொன்று நாடகம்; கிரீஷ்மா பாணியில் அதிரவைத்த இளம்பெண்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் போலீஸுக்கு போன்செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்... மேலும் பார்க்க

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசார... மேலும் பார்க்க