செய்திகள் :

உத்தரப்பிரதேசம்: "எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாவு" - கணவன் தற்கொலை; காதலனுடன் வெளியேறிய மனைவி

post image

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் (45). கூலித்தொழிலாளரான சர்வேஷ் மனைவி ரிங்கி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் அதே தெருவில் ஹகீம் என்பவருடன் ரிங்கிக்குத் தொடர்பு ஏற்பட்டது.

எலி மருந்து

இத்தொடர்பு திருமணம் தாண்டிய உறவாக மாறியது. இது குறித்துத் தெரிய வந்தவுடன் சர்வேஷ் தனது மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. சம்பவத்தன்று இச்சண்டை முற்றியது. ஹகீமுடனான தொடர்பைத் துண்டிக்கும்படி சர்வேஷ் கேட்டுக்கொண்டார்.

ஆனால் ரிங்கு அதனைக் கேட்கவில்லை. சண்டையின் போது ரிங்கு தனது கணவரிடம் எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாகும்படி கூறிவிட்டு தனது காதலனுடன் வெளியேறினார்.

எலி மருத்து
எலி மருத்து

வீடியோ மெசேஜ்

இதனால் விரக்தியடைந்த சர்வேஷ் கடையிலிருந்து பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் வைத்து அதனைக் குடித்துவிட்டார். உடனே உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையின் போது படுக்கையிலிருந்தபடி வீடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மனைவிக்கு அதே தெருவில் வசிக்கும் ஹகீம் என்பவருடன் தொடர்பு இருப்பதாகவும், என்னை எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாகும்படி கேட்டுக்கொண்டார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வேஷ் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இதையடுத்து சர்வேஷ் உறவினர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எனவே சர்வேஷ் மனைவி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சர்வேஷ் மகள் ராஷி கூறுகையில், ''எனது பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வர். இதற்கு முன்பு எனது தாயார் ஒரு முறை வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அப்போது குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எனது தந்தை மீண்டும் அழைத்து வந்தார்'' என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னை: தினமும் பாலியல் டார்ச்சர் - இளைஞரை சிக்க வைத்த இளம்பெண்

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது அவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திர... மேலும் பார்க்க

கொல்கத்தா: போலி ஆதார், ரேஷன் கார்டுடன் கைதான வங்கதேச நடிகை சாந்தா பால்; விசாரணையில் பகீர் தகவல்

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது ... மேலும் பார்க்க

ஜூஸில் பூச்சிமருந்து கலந்து ஆண் நண்பனைக் கொன்று நாடகம்; கிரீஷ்மா பாணியில் அதிரவைத்த இளம்பெண்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் போலீஸுக்கு போன்செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்... மேலும் பார்க்க

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசார... மேலும் பார்க்க