செய்திகள் :

சென்னை: தினமும் பாலியல் டார்ச்சர் - இளைஞரை சிக்க வைத்த இளம்பெண்

post image

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது அவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், சம்பந்தப்பட்ட இளைஞரை எச்சரித்திருக்கிறார். ஆனாலும் அந்த இளைஞர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை. சம்பவத்தன்று இளம்பெண் பேருந்தில் செல்லும்போது அந்த இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால், இளம்பெண், காவல் கட்டுப்பாட்டறைக்கு போனில் தகவல் தெரிவித்திருக்கிறார்.

arrest

உடனடியாக காவல் கட்டுபாட்டறையிலிருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையமான வேளச்சேரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளைஞர் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரின் பெயர் ராஜா என்றும் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இளம் பெண்ணை ராஜா என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். ராஜாவின் காதலை இளம்பெண் ஏற்கவில்லை. அதனால்தான் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் ராஜா. இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார். அதனால்தான் தைரியமாக எங்களிடம் புகாரளித்து ராஜாவை பிடித்துக் கொடுத்திருக்கிறார் இளம்பெண்' என்றனர்.

கொல்கத்தா: போலி ஆதார், ரேஷன் கார்டுடன் கைதான வங்கதேச நடிகை சாந்தா பால்; விசாரணையில் பகீர் தகவல்

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது ... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: "எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாவு" - கணவன் தற்கொலை; காதலனுடன் வெளியேறிய மனைவி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் (45). கூலித்தொழிலாளரான சர்வேஷ் மனைவி ரிங்கி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் அதே தெருவில் ஹகீம் என்பவருடன் ரி... மேலும் பார்க்க

ஜூஸில் பூச்சிமருந்து கலந்து ஆண் நண்பனைக் கொன்று நாடகம்; கிரீஷ்மா பாணியில் அதிரவைத்த இளம்பெண்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் போலீஸுக்கு போன்செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்... மேலும் பார்க்க

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசார... மேலும் பார்க்க