செய்திகள் :

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

post image

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் உள்பட மூவருக்கு சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை(ஆக. 2) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னதாக, இவர்களது ஜாமீன் மனு கீழமை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

வழக்கின் விசாரணையில், துர்க் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் 3 சிறுமிகளை அழைத்துச் சென்று கண்ணியஸ்திரிகள் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக வாதிடப்பட்டது. இந்தநிலையில், எதிர் தரப்பிலிருந்து வாதிட்ட வழக்குரைஞர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் 3 பெண்களும் சிறுமிகள் அல்ல; 18 வயது நிரம்பிய பெண்கள் என்று கன்னியாஸ்திரிகள் தரப்பிலிருந்து எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணைக்குப்பின், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ரூ. 50,000 நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Chhattisgarh court grants bail to two Kerala nuns in human trafficking-religious conversion case

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க