செய்திகள் :

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

post image

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளாக பணக்கார இஸ்லாமிய ஆண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆசிரியர் எனக் கூறப்படும் சமீரா பாத்திமா, இதுவரை 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்களை மிரட்டி பணத்தையும் பெற்றுள்ளார்.

இறுதியாக, 9 வது திருமணத்துக்கு தயாராக இருந்த நிலையில், காவல்துறைக்கு பாதிக்கப்பட்ட ஒரு ஆண் அளித்த புகாரைத் தொடர்ந்து நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏமாற்றியது எப்படி?

மேட்ரிமோனி வலைதளம் மற்றும் போலி முகநூல் கணக்குகள் மூலம் பணக்கார இஸ்லாமிய ஆண்களை தொடர்பு கொள்ளும் சமீரா, தன்னை விவாகரத்து பெற்ற பெண்ணாகவும் குழந்தை இருப்பதாகவும் கூறி அவர்களின் அனுதாபத்தையும் நம்பிக்கையும் பெற புனயப்பட்ட கதைகளை கூறியுள்ளார்.

அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவுடன் திருமணம் செய்துகொள்வார். பின்னர், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் பொதுவெளியில் அவமானப்படுத்தப் போவதாகவும் அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதற்காக ஒரு மோசடி கும்பலையும் சமீரா ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் 8 ஆண்களை சமீரா ஏமாற்றியிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒருவரிடம் ரூ. 50 லட்சம் மற்றொருவரிடம் ரூ. 15 லட்சம் பணத்தைப் பறித்துள்ளார். அவர்களிடம் பணமாகவும் வங்கி பரிவர்த்தை மூலமாகவும் பெற்றுள்ளார். ஏமாற்றப்பட்ட 8 ஆண்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை மிரட்டல் மூலம் சமீரா பெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீராவின் வலையில் சிக்கியவர்களில் ரிசர்வ் வங்கியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி, நாக்பூர் தேநீர் கடையில் வைத்து சமீராவைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், சமீராவின் மோசடி கும்பலில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Police have arrested a woman who cheated and married several men for money, as she prepared for her 9th marriage.

இதையும் படிக்க : மக்களவைத் தேர்தல் மோசடி: 6.5 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் போலி வாக்காளர்கள்! - ராகுல்

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில், பரத்பூ... மேலும் பார்க்க

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழு... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்க... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடு... மேலும் பார்க்க