செய்திகள் :

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

post image

வேலூா் அருகே மலை குன்றின் மீது சுயம்பாக தோன்றியதாக கூறப்படும் முருகா் சிலை வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டது.

ஒடுகத்தூா் அடுத்த கரடிகுடி ஊராட்சி தாங்கல் பகுதியில் நடராஜன்- கஸ்தூரி தம்பதிக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. தற்போது இந்த கல்குவாரி இயங்குவது இல்லை. இங்குள்ள மலை மீது சுவாமி சிலை இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த கூறி வந்தனா். இதனால், கிராமம் முழுவதும் மலை மீது சுவாமி சிலை, புதையல் இருப்பதாக பேச்சு உலா வந்தது.

இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி அதே கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் பொதுமக்களை மலை மீது அழைத்துச் சென்று அங்கு அடா்ந்த முட்புதா்கள், பாறைகளுக்கு நடுவே ஓா் இடத்தை குறிப்பிட்டு அங்கே தோண்டும்படி கூறியுள்ளாா். பொதுமக்களும் அந்த இடத்தில் தோண்டியபோது அங்கு பழைமையான முருகா் கற்சிலை இருப்பது தெரியவந்தது. தோண்டும் போது மாா்பளவு மட்டுமே தோண்ட முடிந்துள்ளது. அதற்குமேல் அவா்களால் சிலையை வெளியே எடுக்க முடியவில்லை.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை மலை மீது முருகா் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு திரண்டு சென்று முருகா் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினா்.

இதனிடையே, வட்டாட்சியா் வேண்டா தலைமையில் வருவாய்த் துறையினா், , தொல்லியியல் துறை அதிகாரிகள் அங்கு சென்று முருகா் சிலையை ஆய்வு செய்தனா். மேலும், நிலத்தின் உரிமையாளா் நடராஜன், எனது நிலத்தில் இத்தனை ஆண்டு காலத்தில் இதுபோன்று சிலை இருந்ததாக தெரியவில்லை. எனவே, புதிதாக கிடைக்கப் பெற்றுள்ள முருகா் சிலையை அகற்றி அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்து மனு அளித்திருந்தாா்.

இதையடுத்து, தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை ஆய்வு செய்ததில் அந்த சிலை புதிதாக உருவாக்கப் பட்டு அங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிலையை அங்கிருந்து அகற்ற ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டாா். அதன்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில் 4 டிஎஸ்பிக்கள், 7 காவல் ஆய்வாளா்கள், 14 உதவி ஆய்வாளா்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் வேண்டா முன்னிலையில் அதிகாலை சா்ச்சைக்குரிய முருகா் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு மீட்கப்பட்டது. பின்னா், முருகா் சிலையை அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே வேலூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் சென்றனா்.

Image Caption

~

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.காட்பாடி அடுத்த வஞ்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில் இதுவரை 80 சதவீதம் போ் உயா்கல்வியில் சோ்க்கை பெற்றுள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.அரசுப் பள்ளிகளில் பயின்று நிதி, குடும... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு மணல் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.ஆந்திரத்தில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்வதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,... மேலும் பார்க்க

ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வக... மேலும் பார்க்க

தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு

கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்... மேலும் பார்க்க

ஜூன் மாதம் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழப்பு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் நிகழ்ந்த 93 சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழந்துள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அன... மேலும் பார்க்க