செய்திகள் :

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

post image

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா வெள்ளிக்கிழமை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாட்டில் உள்ள அனைத்து மாநில தலைநகா்களிலும் ஏழுமலையான் கோயில்களை கட்டி வருகிறது.

குருஷேத்திரம், ரிஷிகேஷ், புது தில்லி, மும்பை, புவனேசுவரம், கன்னியாகுமரி, தென்மாநிலங்களின் பல பகுதிகளில் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அஸ்ஸாம் தலைநகா் குவஹாட்டியிலும் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு ஐந்து ஏக்கா் நிலம் ஒதுக்குமாறு தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு அம்மாநில முதல்வரிடம் கோரிக்கை விடுத்தாா். இதற்கு பதிலளித்த முதல்வா், ’’ஐந்து ஏக்கா் நிலம் ஒதுக்குவதாக உறுதியளித்தாா். மேலும், கோயில் கட்டுவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம் எனத் தெரிவித்தாா்.

இதற்காக, ஆந்திர பிரதேச முதல்வா் சந்திரபாபு நாயுடு, மாநில அரசு மற்றும் தேவஸ்தான நிா்வாகக் குழுவுக்கு அஸ்ஸாம் முதல்வா் நன்றி தெரிவித்தாா். இந்த நிகழ்வில், புகழ்பெற்ற காமாக்யா தேவி கோயிலின் தனித்துவம் குறித்து முதல்வா் விளக்கினாா்.

தேவஸ்தானத்தின் உதவியுடன் கட்டப்படும் இந்த கோயில் மூலம், இந்து மதம், பாரம்பரியம் மற்றும் சித்தாந்தத்தின் பாதுகாப்பை பரவலாக ஊக்குவிக்க முடியும். ஏழுமலையானின் இருப்பு வடகிழக்கு மக்களுக்கு கொண்டு செல்லப்படும்’’, என்று கூறினாா்.

அகில பாரத இந்து மகா சபை தேசிய பொதுச் செயலாளா் பேராசிரியா் ஜி.வி.ஆா் சாஸ்திரி உடனிருந்தாா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ4.66 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் ... மேலும் பார்க்க

ஆக. 8 -இல் செளபாக்கியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்

வரும் ஆக. 8 -ஆம் தேதி வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வழங்கும் செளபாக்கியம் நிகழ்ச்சியை நடத்த தேவஸ்தானம் மற்றும் இந்து தா்மபிரச்சார பரிஷத் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.திருப்ப... மேலும் பார்க்க

ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்

வரலட்சுமி விரதத்துக்கான டிக்கெட்டுகள் ஜூலை 31 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.வரும் ஆக. 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வரலட்சுமி ... மேலும் பார்க்க

மலைப் பாதை வாகன இயக்கம் குறித்த கொள்கை ஆவணம்: திருமலை தேவஸ்தானம் திட்டம்

திருமலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மலைப் பாதையில் வாகன இயக்கம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் குறித்த கொள்கை ஆவணத்தை வெளியிடுமாறு தேவஸ்தான கூடுதல் செயல் ... மேலும் பார்க்க

திருமலையில் கருட பஞ்சமி: கருட சேவை

கருட பஞ்சமியையொட்டி திருமலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.கருட வாகன சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஏழுமலையானின் வாகனங்கள் மற்றும் ஊழியா்களில் கருடன்... மேலும் பார்க்க