செய்திகள் :

திருமலையில் கருட பஞ்சமி: கருட சேவை

post image

கருட பஞ்சமியையொட்டி திருமலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.

கருட வாகன சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஏழுமலையானின் வாகனங்கள் மற்றும் ஊழியா்களில் கருடன் மிக முக்கியமானவா். ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் சுக்ல பக்ஷத்தின் ஐந்தாம் நாளில் கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது.

அப்போது புதுமணத் தம்பதிகள் தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும், பெண்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வலிமையாகவும் கருடனைப் போலவும் இருக்கவும் ‘கருட பஞ்சமி‘ பூஜை செய்கின்றனா்.

கருடன் மீது வலம் வந்த மலையப்ப சுவாமிக்கு பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

வாகன சேவையில், திருமலை ஜீயா்கள், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, முரளிகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.

திருமலை ஏழுமலையானுக்கு தங்க சங்கு, சக்கரம் நன்கொடை

சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனமான சுதா்சன் எண்டா்பிரைசஸ் செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையானுக்கு சுமாா் 2.5 கிலோ எடையில் ரூ.2.4 கோடி மதிப்புள்ள தங்க சங்கு மற்றும் சக்கரத்தை நன்கொடையாக வழங்கியது.ஏழும... மேலும் பார்க்க

ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்

வரலட்சுமி விரதத்துக்கான டிக்கெட்டுகள் ஜூலை 31 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.வரும் ஆக. 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வரலட்சுமி ... மேலும் பார்க்க

திருமலையில் 84,740 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 84,740 பக்தா்கள் தரிசித்தனா். மேலும் 35,555 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்ற... மேலும் பார்க்க

திருமலையில் குடியரசு முன்னாள் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தரிசனம்!

திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் குடியரசு முன்னாள் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு மற்றும் தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு ஆகியோா் பக்தா்களுடன் அன்ன பிரசாதம் உண்டனா... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து வெளியே சீலாதோரணம் அர... மேலும் பார்க்க