விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 73, 578 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,227 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.