செய்திகள் :

PM Modi TN Visit: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி; இளையராஜாவின் புதிய இசைத் தொகுப்பு வெளியீடு

post image

தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார்.

இதையடுத்து இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொள்கிறார். இதற்காக நேற்று இரவு திருச்சியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார் மோடி. திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.கவினர் மோடியை வரவேற்று பேசியிருக்கின்றனர். பாஜகவுடனான கூட்டணி அறிவிப்புக்குப் பின் முதல் முறையாக பிரதமரைச் சந்தித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

மின்னொளியில் ஜொலிக்கும் கோயில்

இன்று அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சென்றிருக்கிறார் மோடி. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரை கங்கை கொண்ட சோழபுரத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

சாமி தரிசனம் செய்த பின்னர் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இளையராஜா இசையில் 'பகவத் கீதை' வரிகளில் உருவாக்கப்பட்ட இசைத் தொகுப்பை மோடி வெளியிடுகிறார்.

இதுதவிர, திருச்சி விமான நிலையத்திற்கு இராஜேந்திர சோழனின் பெயரை சூட்ட வேண்டும், நெதர்லாந்தில் உள்ள ஆனைமங்கலம் செப்பேட்டை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகள் ஏற்கெனவே பிரதமர் மோடியிடம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அறிவிப்புகள் ஏதுவும் வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் அரியலூர் மாவட்டம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மோடி, எடப்பாடி

இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். பிற்பகல் 2.25 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியதும், 2.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Coverage Album

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்.! மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரக்க வைத்த மர்ம நபர்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 21), சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதி கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு ஆஞ்சியோ ப... மேலும் பார்க்க

கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாநகர் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி பானுமதி. 5 மாத கர்ப்பிணியான இவர், திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டி. எ... மேலும் பார்க்க

Today Roundup: மோடி தமிழ்நாடு வருகை டு சேரனின் ராமதாஸ் பயோபிக் | Headlines

இன்றைய நாளின் (ஜூலை 25) முக்கியச் செய்திகள்!*முதல்வர் மு.க.ஸ்டாலின்: பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (BiharSIR) கைவிட வேண்டும். முழுவீச்சில் தமிழ்நாடு இதற்கு எதிராகப... மேலும் பார்க்க

Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்படுகின்றது.இந்த ... மேலும் பார்க்க

OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அதிரடி நடவடிக்கையும்!

ஆபாசம் நிறைந்த வசனங்கள், காட்சிகள், காணொலிகள் இருப்பதாகக் கூறி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 25 ஓடிடி செயலிகளுக்குத் தடைவிதித்திருக்கிறது. சில ஓடிடி செயலிகள் ஆபாசமான காணொலிகள், வெப்சீரிஸ், ... மேலும் பார்க்க