செய்திகள் :

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரக்க வைத்த மர்ம நபர்!

post image

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 21), சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதி கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு, இன்று 7வது நாளாக மருத்துவர்களின் அறிவுரையின்படி ஓய்வெடுத்து வருகிறார். அங்கிருந்தே தனது பணிகளை கவனித்து வருகிறார். ''மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் ஓய்வெடுக்க மனமில்லை" என்று நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் ஸ்டாலின். இன்று அவர் வீடு திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

ஸ்டாலின்
மருத்துவமனையில் ஸ்டாலின்

இந்நிலையில் திடீரென இன்று அதிகாலையில் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை, கோட்டூர் புரத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு பாதுகாப்புத் தீவிரமாகப் பலப்படுத்தப்பட்டது.

இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் மோடி, நேற்று துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொள்கிறார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்த புரளியான வெடிகுண்டு மிரட்டல் அதிகாலை முதலே காவல்துறைக்குப் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Coverage Album

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்.! மேலும் பார்க்க

PM Modi TN Visit: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி; இளையராஜாவின் புதிய இசைத் தொகுப்பு வெளியீடு

தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்ன... மேலும் பார்க்க

கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாநகர் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி பானுமதி. 5 மாத கர்ப்பிணியான இவர், திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டி. எ... மேலும் பார்க்க

Today Roundup: மோடி தமிழ்நாடு வருகை டு சேரனின் ராமதாஸ் பயோபிக் | Headlines

இன்றைய நாளின் (ஜூலை 25) முக்கியச் செய்திகள்!*முதல்வர் மு.க.ஸ்டாலின்: பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (BiharSIR) கைவிட வேண்டும். முழுவீச்சில் தமிழ்நாடு இதற்கு எதிராகப... மேலும் பார்க்க

Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்படுகின்றது.இந்த ... மேலும் பார்க்க

OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அதிரடி நடவடிக்கையும்!

ஆபாசம் நிறைந்த வசனங்கள், காட்சிகள், காணொலிகள் இருப்பதாகக் கூறி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 25 ஓடிடி செயலிகளுக்குத் தடைவிதித்திருக்கிறது. சில ஓடிடி செயலிகள் ஆபாசமான காணொலிகள், வெப்சீரிஸ், ... மேலும் பார்க்க