செய்திகள் :

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

post image

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள் என பல்வேறு முக்கியஸ்தர்களின் இல்ல விழாக்களில் ஆர்டர் எடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் விருந்து ஏற்பாடு செய்து வருகிறார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வந்தன. அதற்கேற்றவாறே ஜாய் கிரிஸில்டாவின் சமூக ஊடகப் பதிவுகளும் இருந்தன. இருப்பினும், இதுகுறித்து இருவரும் எந்தவித பதிலோ கருத்தோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், தான் 6 மாதகாலமாக கருவுற்றிருப்பதாகக் கூறி, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தை ஜாய் கிரிஸில்டா பதிவிட்டுள்ளார். மேலும், அவரின் நெற்றியில் மாதம்பட்டி ரங்கராஜ் குங்குமம் வைப்பதுபோலவும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆனால், ஸ்ருதியுடன் விவாகரத்து செய்துவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜோ ஸ்ருதியோ இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படியிருக்கையில், எவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியும்? முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்துகொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!

Chef Madhampatty Rangaraj marries designer Joy Crizildaa

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனு குறித்து முதல்வர் ஸ்டாலின்!

மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை... மேலும் பார்க்க