செய்திகள் :

"இந்தியர்களின் ரத்தத்தில் லாபம் பார்க்காதீர்" - Ind vs Pak ஆசிய கோப்பை போட்டிக்கு எம்.பி எதிர்ப்பு

post image

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இனி இந்தியா கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று பலரும் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

அந்த சம்பவத்தின்போதே, BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "ஐ.சி.சி தொடர்கள் என்று வரும்போது மட்டும், ஐ.சி.சி-யால்தான் நாங்கள் அவர்களுடன் விளையாடுகிறோம். என்ன நடக்கிறது என்பதை ஐ.சி.சி-யும் அறிந்திருக்கிறது" என்று பாகிஸ்தானுடன் விருப்பமில்லாமல்தான் விளையாடுகிறோம் மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் World Championship of Legends டி20 தொடரில்கூட இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இதனால், செப்டம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானும் இருப்பதால் இந்தியா விளையாடுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது அல்லது தொடரிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இத்தகைய சூழலில் ஆசிய கோப்பை போட்டி அட்டவணை நேற்று வெளியானது.

அதில், குரூப் A-ல் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும், குரூப் B-ல் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும், செப்டம்பர் 14-ம் தேதி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் விளையாட வேண்டும் என்று இரு அணிகளையும் ஒரே குழுவில் இடம்பெறும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி பிரியங்கா சதுர்வேதி
சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி பிரியங்கா சதுர்வேதி

அந்த வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, "கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுடனான எந்தவொரு போட்டியையும் நீங்கள் எந்த நாட்டிற்கு மாற்றினாலும், இந்தியர்களான நாங்கள் அனைவரும் அதனை எதிர்ப்போம் என்பதை பிசிசிஐ நினைவில் கொள்ளவேண்டும்.

இந்திய மக்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களின் ரத்தத்திலிருந்து உங்களின் லாபத்தை நிறுத்துங்கள்.

ஒருபக்கம், நம் பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி ( Chief of Defence Staff) அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.

மறுபக்கம், ரத்தத்தில் லாபம் பார்க்க நினைக்கிறீர்கள் நீங்கள்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

"நீங்கள் இதைக் கேட்டிருக்கவே கூடாது" - பாகிஸ்தானுடனான போட்டி தொடர்பாக நிருபரிடம் தவான் கோபம்

முன்னாள் வீரர்கள் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கலந்துகொள்ளும் WCL (World Championship of Legends) டி20 தொடர் ஜூலை 18 முதல் நடைப... மேலும் பார்க்க

kamalini: "கிரிக்கெட்டில அரசியல் இல்ல; பெண் பிள்ளைகளை நம்பி விடுங்க"- தமிழக வீராங்கனை கமலினி

U19 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கமலினி இன்று( ஜூலை 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "கடின உழைப்பு மிகவும் முக்கியம். அது இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. என்னுடைய அப... மேலும் பார்க்க

Joe Root: சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பது சாத்தியமா? எண்களை வைத்து ஓர் அலசல்!

டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் இங்கிலாந்து சூப்பர் ஸ்டார் ஜோ ரூட். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அட்டகாசமாக ஆடி சாதனைகள் மேல் சா... மேலும் பார்க்க

AUS vs WI: "இது என் சிறுவயது கனவு" - 37 பந்துகளில் சதமடித்த பிறகு டிம் டேவிட் பேசியது என்ன?

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது. இதில் உலக சாதனை படைத்துள்ள டிம் டேவிட், தான் சாதனைகளுக்காக விளையாடவி... மேலும் பார்க்க

``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்சினின் பாராட்டும்

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது (ஜுலை 23 முதல்).இதில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது கிறிஸ்... மேலும் பார்க்க

Pant: `காயத்துடன் களமிறங்கும் ரிஷப் பண்ட்; ஆனால் கீப்பிங் மட்டும்..." - BCCI கொடுத்த அப்டேட்

இங்கிலாந்து இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றைய (ஜூலை 23) தினம் மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. போட்டியின்போது பேட்டிங் விளையாடிய இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு காலில்... மேலும் பார்க்க