செய்திகள் :

தில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

post image

திருச்சியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி தில்லி புறப்பட்டார்.

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் முருகன், ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்றைய இரவு நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து பிரதமர் பேசினார். பின்னர், இரவு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார்.

சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றார். அங்கு நடைபெற்ற மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா முடிந்து அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திருச்சி கிளம்பினார். இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் தலைநகர் தில்லி புறப்பட்டார்.

Prime Minister Modi left for Delhi on a private flight from Trichy.

தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த வேகத்தில் காற்றும் வீசுவதால் தொட்டபெட்டா, பைன் மரக் காடு உள்ள... மேலும் பார்க்க

சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

கங்கை கொண்ட சோழபுரத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இளையாராவை பிரதம் மோடி மிகவும் பாராட்டி பேசியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த ந... மேலும் பார்க்க

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க