செய்திகள் :

சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

post image

சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-ஆவது பதிப்பில் இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளில்(ஜூலை 27) பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘2047-இல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய வழியில் சுயசார்புத்தன்மையும் உள்ளூர் மக்களுக்கான முக்கியத்துவமும் இடம்பெறுவது அவசியமாகிறது’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் சுபான்ஷு சுக்லாவை வெகுவாகப் பாராட்டியதுடன், விண்வெளித் துறை மீதான ஆர்வம் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விண்வெளித் துறையில் 200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் இன்றைய காலகட்டத்தில் உருவெடுத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Subhanshu Shukla's achievement has increased children's interest in space exploration: PM Modi

தமிழ்நாட்டுக்கு 3 மடங்கு அதிக நிதி: பிரதமர் ஏன் புரிதலின்றி பேசுகிறார்? -ப.சிதம்பரம்

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் 3 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது சரியான தகவலே! ஆனாலும், ஒன்றை அவர் உணரவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெர... மேலும் பார்க்க

அப்துல் கலாம் நினைவு நாள்: பிரதமா் மோடி புகழஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "நமது அன்புக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியரைத் தாக்கிய புலியால் பரபரப்பு !

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் புலி கூண்டில் உள்ள குடிநீரை அதன் மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஞாயிற்ற... மேலும் பார்க்க

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க