செய்திகள் :

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

post image

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின் தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கின.

தொடர்ந்து மாலையில் இருத்தரப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதுவரை, என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் நான்கு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பஸ்தர் பிரிவு ஐஜி சுந்தர்ராஜ் கூறினார்.

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கடந்த 18 மாதங்களில், பஸ்தர் மலைத்தொடரில் பல்வேறு மோதல்களில் 425 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படைகளுடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சல்சல்கள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

உளவுத் துறையின் தகவலின் பேரில், ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் கும்லா காவல்துறையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

At least four Maoist cadres were killed in an exchange of fire in Chhattisgarh's Bijapur district, while three others were killed in Jharkhand’s Gumla district.

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க