செய்திகள் :

இசைவெளியீட்டு விழாவில் ரஜினி இதைக் குறிப்பிடுவார்: லோகேஷ் கனகராஜ்

post image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவதுடன் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, படத்தின் புரமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் நேர்காணல்கள் அளித்து வருகிறார்.

அப்படி, நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ், “நான் ரஜினி சாருக்கு கதை சொல்லும்போதே, என்னை கமல்ஹாசன் ரசிகன் என்று சொல்லித்தான் ஆரம்பித்தேன். அப்போது, அவர் ஒன்றும் சொல்லவில்லை.

கூலி படத்தின் டப்பிங் முடிந்ததும் என் உதவி இயக்குநர்களிடம், ‘லோகேஷ் கமல் ரசிகர் எனச் சொல்லித்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவரை இசைவெளியீட்டு விழாவில் பார்த்துக் கொள்கிறேன்’ என நகைச்சுவையாகக் கூறி சென்றார். அதனால், இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றி என்ன பேசப்போகிறார் என்பதில் பயம் கலந்த ஆர்வம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்: விஜய் சேதுபதி

director lokesh kanagaraj talks about a incident with actor rajinikanth during coolie dubbing

சிம்பு, வெற்றி மாறன் படத்தின் அப்டேட்!

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிற... மேலும் பார்க்க

விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்!

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மெஸ்ஸி..! டிராவில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸி இல்லாமல் விளையாடிய இன்டர் மியாமி அணியின் ஆட்டம் சமனில் முடிந்தது.அமெரிக்காவின் சேஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணியும் சின்சினாட்... மேலும் பார்க்க

ஓம் சிவோஹம்... இளையராஜாவின் இசைக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு!

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெறும் முதலாம் ... மேலும் பார்க்க

பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவுக்கு ஏன் வந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதுடன் இந்தியளவில் அறியக்கூடிய நடிகராகவும் இருக்கிறார். தற்போது, ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பண்ணைபுரம்!

இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சிக்காக கங்கை கொண்ட சோழபுரம் வந்தடைந்தார். அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்ப... மேலும் பார்க்க