செய்திகள் :

குற்றாலம்: ஐந்தருவி மலர் கண்காட்சி; அசரவைத்த காய்கறி குரங்கு, `வாசனைப் பொருள்' வண்ணத்துப்பூச்சி

post image

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. குற்றாலத்தில் சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான குற்றாலம் சாரல் திருவிழா 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. குற்றால சாரல் திருவிழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

மலரினாலான அருவி

இதன் ஒரு பகுதியாக ஐந்தருவியில் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலை சார்பாக மலர் கண்காட்சி நடைபெற்றது. இதில் பழங்கள். காய்கறிகள், மலர்கள் மற்றும் வாசனைப் பொருட்களை கொண்டு தமிழ்நாடு பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைப்புகள் மற்றும் கருத்துக்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட பொருட்கள் பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் வாசனை பொருட்களாலான வண்ணத்துப்பூச்சி மக்களின் மனதை கவர்ந்தது.

இந்த வண்ணத்துப்பூச்சி 19 வகையான வாசனை பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இங்கு வந்த பார்வையாளர்களும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இதனைக் கண்டு களித்து ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துச் சென்றனர். இந்த வாசனைப் பொருட்களாலான வண்ணத்துப்பூச்சியானது சுமார் 8 அடி உயரமும் ஏழரை அடி அகலமும் கொண்டது.

காய்கறி குரங்கு

இந்த வண்ணத்துப்பூச்சியை சுமார் நான்கு பேர் கொண்ட குழுவினரால் ஒரு வார காலமாக வடிவமைத்துள்ளனர். இதில் பயன்படுத்தப்பட்ட வாசனைப் பொருட்கள் ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, சோம்பு, சீரகம், கசகசா, ஸ்டார் பூ, மிளகாய் விதை, கருஞ்சீரகம், மராட்டி மொக்கு, வெந்தயம், காய்ந்த கொத்தமல்லி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, வெள்ளை எள், மஞ்சள், சுக்கு, திப்பிலி, மிளகு உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி உள்ளனர். இதனுடன் காய்கறியால் செய்யப்பட்ட குரங்கு, பூவினால் செய்யப்பட்ட ஐந்தருவி, பட்டுப்பூச்சி போன்றவை மூன்று முதல் நான்கு அடி உயரம் உள்ள இரும்புத் தூணிலே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மலர் கண்காட்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தோட்டக்கலைத்துறை செய்திருந்தது.

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி இயற்கை அழகு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு மலைவாசஸ்தலமாகும். இங்கு ஒரு சூப்பர் ஸ்பாட் பற்றி தான் சொல்லப்போகிறோம்.எமரால்டு ஏரி இந்த ஏரி, எமரால்டு க... மேலும் பார்க்க

வெறும் 100 ரூபாய்க்கு பிரான்ஸில் வீடு விற்பனை; அரசின் இந்த திட்டத்தில் எப்படி வீடு வாங்கலாம்?

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அம்பர்ட் நகரத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதால், அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக, வெறும் ஒரு யூரோவுக்கு (தோராயமாக 100 ரூபாய்) வீடுகளை விற்பனை செய்யும் தனித்... மேலும் பார்க்க

சதுரகிரி: `கொள்ளை அழகு!' - மிஸ் பண்ணவேகூடாத வழித்தடம் | Photo Album

இயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி ... மேலும் பார்க்க

வானத்திலிருந்து ஜல்லிக்கற்கள் அதிக விசையில் எங்கள்மேல் விழுவதைப் போலிருந்தது! - திசையெல்லாம் பனி- 8

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வந்தே பாரத்: 'உங்கள் ஸ்டேஷனுக்கு ரயில் வர 15 நிமிடங்கள் தான் இருக்கிறதா?' - டிக்கெட் புக் செய்யலாம்!

வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது தெற்கு ரயில்வே துறை. இனி, உங்கள் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, அந்த ... மேலும் பார்க்க