செய்திகள் :

கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூரில் நடந்தது என்ன?

post image

திருப்பூர் மாநகர் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி பானுமதி. 5 மாத கர்ப்பிணியான இவர், திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டி. எஸ்.கே. அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இன்று பரிசோதனைக்குச் சென்றிருந்த நிலையில், பானுமதிக்கு குளுக்கோஸ் பாக்கெட் வழங்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட குளுக்கோஸ் பாக்கெட் தரம் இல்லாத நிலையில் இருப்பதைக் கண்டு பானுமதி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, உறவினர்களுக்கு அவர் தெரியப்படுத்தவே, அவர்கள் மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் காலாவதியான நிலையில் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் வழங்கிய குளுக்கோஸ் பாக்கெட்டுகளை பரிசோதனை செய்ததில் அவற்றில் சில காலாவதியான நிலையில் இருந்தது தெரியவந்தது. செவிலியர்களின் கவனக்குறைவால் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகளை அப்புறப்படுத்திய நிலையில், செவிலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முற்றுகை

இதுகுறித்து மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன் கூறுகையில், “குளுக்கோஸ் பாக்கெட்டுகள் காலாவதியான நிலையில் விநியோகப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மே மாதம் 2026 வரை உள்ள பாக்கெட்டுகளுடன், மே மாதம் 2025- வரை உள்ள 7 பாக்கெட்டுகள் கலந்துள்ளன. இதனை கவனிக்காமல் கர்ப்பிணிக்கு தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர், லேப் டெக்னிஷியன் உட்பட 4 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனைத்து மருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டது. காலாவதியான 7 குளுக்கோஸ் மட்டும் முறையாக அப்புறப்படுத்தப்பட்டன” என்றார். இதைத் தொடர்ந்து, பானுமதியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Today Roundup: மோடி தமிழ்நாடு வருகை டு சேரனின் ராமதாஸ் பயோபிக் | Headlines

இன்றைய நாளின் (ஜூலை 25) முக்கியச் செய்திகள்!*முதல்வர் மு.க.ஸ்டாலின்: பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (BiharSIR) கைவிட வேண்டும். முழுவீச்சில் தமிழ்நாடு இதற்கு எதிராகப... மேலும் பார்க்க

Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்படுகின்றது.இந்த ... மேலும் பார்க்க

OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அதிரடி நடவடிக்கையும்!

ஆபாசம் நிறைந்த வசனங்கள், காட்சிகள், காணொலிகள் இருப்பதாகக் கூறி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 25 ஓடிடி செயலிகளுக்குத் தடைவிதித்திருக்கிறது. சில ஓடிடி செயலிகள் ஆபாசமான காணொலிகள், வெப்சீரிஸ், ... மேலும் பார்க்க

Kamal Haasan: ``காந்தி, அம்பேத்கர், பெரியாரின் எண்ணங்கள் என் நரம்புகளில் ஓடுகிறது. ஆனால்..!" - கமல்

இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சா... மேலும் பார்க்க

Kamal Haasan: ``கமல்ஹாசன் எனும் நான்... கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன்" - மாநிலங்களவையில் கமல்

இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்!

பிரதமர் மோடி மீது இருக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக தொடர் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இப்போ... மேலும் பார்க்க