செய்திகள் :

சாதனைகளுக்காக நான் விளையாடவில்லை: டிம் டேவிட்

post image

டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் தான் சாதனைகளை நிகழ்த்த விளையாடவில்லை எனக் கூறியது கவனம் ஈர்த்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 214/4 ரன்கள் குவிக்க, ஆஸி. 16.1 ஓவரில் 215/4 ரன்கள் எடுத்து தொடரை வென்றது.

இந்தப் போட்டியில் டிம் டேவிட் 16 பந்தில் அரைசதம், 37 பந்தில் சதம் அடித்து பல சாதனைகளை நிகழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு டிம் டேவிட் பேசியதாவது:

டாப் ஆர்டரில் விளையாட வேண்டுமென நினைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றாக விளையாட நினைக்கிறேன்.

எனக்கு சிறியதாக உடல் உபாதைகள் இருந்தன. வீட்டில் ஓய்வெடுத்தது நன்றாக இருந்தது. சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைக்குமென அதிகமாக யோசிக்கவில்லை.

நான் சாதனைகளுக்காக விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக சதம் அடிப்பது என்பது எனக்கும் சிறுவயது கனவுதான்.

இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. பவுண்ட்ரி எல்லைகளும் சிறியதாக இருந்தன. என்னுடைய அனுபவத்தை உபயோகித்து விளையாடினேன்.

எனது பவர் - ஹிட்டிங் பேட்டிங்கில் அதிகமாக பயிற்சி எடுத்திருக்கிறேன். இருப்பினும் நான் குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் அடிக்கும் ஸ்ட்ரோக் மேக்கராகவே இருக்க விரும்புகிறேன்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை; செப்.14-ல் இந்தியா - பாக். மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. த்ரில் வெற்றி!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூஸிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. New Zealand vs South Africa, Final - New Zealand won by 3 runs மேலும் பார்க்க

விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி: கிறிஸ் கெயில்

நீண்ட ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்கான தேடலில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் - ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டம்: பரபரப்பான கட்டத்தில் 4-ஆவது டெஸ்ட்!

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நான்காம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா ... மேலும் பார்க்க

பும்ரா தோற்றுவிட்டார், விரைவில் ஓய்வை அறிவிக்கலாம்: முன்னாள் இந்திய வீரர்

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் க... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: இந்தியா- பாக். இடையே 3 போட்டிகள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை நேருக்குநேர் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் ஆரம்பமாகும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவு... மேலும் பார்க்க