செய்திகள் :

புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் - ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?

post image

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோயை எதிர்க்கும் உலகளாவிய தடுப்பூசி உருவாக்குவதில் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.

இந்த ஆய்வு, எலிகளில் நடத்தப்பட்டதாக நேச்சர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய mRNA தடுப்பூசி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Rep image

தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?

இந்த தடுப்பூசி புற்றுநோய் செல்களை அல்லது வைரஸை இலக்காகக் கொள்ளாமல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ”ஒரு வைரஸை எதிர்த்துப் போராடுவது போல்” புற்றுநோயை எதிர்க்கத் தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுபடி, இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதன் மூலம், வலுவான புற்றுநோய் எதிர்ப்பு எதிர்வினையை நாம் ஏற்படுத்த முடியும். இது ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடி (நோயெதிர்ப்பு மருந்து) உடன் இணைந்து பயன்படுத்தப்பட்டபோது சிறப்பான பலன்களைக் காட்டியது.

இந்த தடுப்பூசி, குறிப்பிட்ட புற்றுநோய் வகைகளுக்கு மட்டும் அல்லாமல், பல்வேறு புற்றுநோய் நோயாளிகளுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வு இன்னும் மனிதர்களில் சோதிக்கப்படவில்லை. ஆனால், மனிதர்களிலும் இதே முடிவுகள் கிடைத்தால் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, மற்றும் கீமோதெரபி போன்றவற்றுக்கு மாற்றாக இந்த உலகளாவிய தடுப்பூசி பயன்படுத்தப்படலாம். "இது ஒரு பொதுவான, எளிதில் கிடைக்கக்கூடிய புற்றுநோய் தடுப்பூசியாக மாறலாம்" என ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர் டுவான் மிட்செல் தெரிவித்திருக்கிறார்.

"இந்த தடுப்பூசி குறிப்பிட்ட புற்றுநோய் அல்லது வைரஸை இலக்காகக் கொள்ளவில்லை, ஆனால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாகத் தூண்டுவதன் மூலம் புற்றுநோய்க்கு எதிரான வலிமையான எதிர்ப்பை உருவாக்குகிறது," என ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் எலியாஸ் சயூர் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு, புற்றுநோய் சிகிச்சையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

Doctor Vikatan: குழந்தைகளுக்கும் ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்?

Doctor Vikatan:குழந்தைகளுக்கு ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்..எப்படிக் கொடுக்கலாம்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர்லேகாஸ்ரீதரன்ஊட்டச்சத்... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கு 'Chronic Venous Insufficiency' நோய் - ட்ரம்பின் பெர்சனல் மருத்துவர் கூறுவது என்ன?

வெள்ளை மாளிகையின் அறிக்கை படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'Chronic Venous Insufficiency' என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், "சமீபத்திய வா... மேலும் பார்க்க

ஒவ்வொரு மாதமும் பெரிதாகும் மார்பகங்கள்; 22 வயது பெண்ணின் அரிய வகை பாதிப்பு; மருத்துவர்கள் விளக்கம்

பிரேசிலைச் சேர்ந்த 22 வயதான தைனாரா மார்க்கோண்டஸ் என்ற பெண் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மாதத்துக்கு ஒரு முறை அவரின் மார்பகங்கள் அளவில் பெரிதாகியிருக்கிறது. இதனால் அந்தப் பெண் கடுமையான வலியால்... மேலும் பார்க்க

Samosa and Jalebi: இனிமே சமோசாவும் ஜிலேபியும் சாப்பிடவே கூடாதா? - மருத்துவர் தரும் விளக்கம்

சாலையோரக் கடைகளில் நம் கண்ணெதிரே சுடச்சுட பொரித்து தரப்படும் சமோசாவும், ஜிலேபியும் பலருடைய ஆல் டைம் ஃபேவரிட் ஸ்நாக்ஸாக மாறி கிட்டத்தட்ட 20 வருடங்களாவது ஆகியிருக்கும். ஒரு கடி சமோசா, ஒரு கடி ஜிலேபி என ... மேலும் பார்க்க

Apollo: எனது உணவு, எனது ஆரோக்கியம்; 'மை ஃபுட் மை ஹெல்த்' என்ற நூலை வெளியிட்ட அப்போலோ

இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் நிறுவனமான அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals], மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சைக்கான [Medical Nutrition Therapy (MNT)] அதிகாரப்பூர்வமான, விரிவான வழிகாட... மேலும் பார்க்க

Health: முதிர்ந்த கீரையைவிட 40 மடங்கு அதிக சத்துகள் கொண்ட மைக்ரோ கீரைகள்!

ஊட்டச்சத்து மூலம் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் மக்கள் கீரைகளில், குறிப்பாக மைக்ரோ கீரைகளைப் பயன்படுத்துவதில் சமீபமாக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டு, பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச... மேலும் பார்க்க