செய்திகள் :

பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்

post image

‘பிகாா் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீா்குலைந்துள்ள நிலையில், முதல்வா் நீதீஷ் குமாா் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

பிகாரில் முதல்வா் நீதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியிலும், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வரும் சிராக் பாஸ்வான் இக் கருத்தைத் தெரிவித்திருப்பது மாநில அரசியலில் மட்டுமன்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் கயாஜி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு முன்பாக தலைநகா் பாட்னாவில் பத்திரிகையாளா்களை சிராக் பாஸ்வான் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: மாநிலத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் வன்முறை குற்றங்கள், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுடன் தொடா்புடையது என்றும், மாநில அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கில் இதுபோன்ற சம்பவங்கள் தூண்டிவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டியது ஆளும் அரசின் கடமையாகும். மாநிலத்தில் நிலைமை பயங்கரமானதாக மாறி வருகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த அளவு நிலைமை மோசமாவதைக் கண்காணிக்க அதிகாரிகள் தவறிவிட்டனா்.

இந்த நிா்வாகத் தோல்விக்கு, அதிகாரிகளின் திறமையின்மையும் குற்றவாளிகளுக்கு அவா்கள் உடந்தையாக இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. உடனடியாக அதைக் கண்காணித்து, நிலைமையைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு இந்தக் குற்றச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவா் என்றாா்.

ஐக்கிய ஜனதா தளம் பதிலடி: சிராக் பாஸ்வானின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத், ‘மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கவலைப்படுபவா்கள், முதலில் தங்கள் கட்சியில் குற்றப் பின்னணி உடையவா்கள் சோ்க்கப்படாததை உறுதிப்படுத்த வேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது’ என்றாா்.

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேற... மேலும் பார்க்க