செய்திகள் :

விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ளை

post image

விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ளது புதுப்பட்டி கிராமம். அங்கு பெருமாள் என்பவரது மகன்கள் கருணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் அருகருகே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இதில், ராதகிருஷ்ணன் சென்னை மெட்ரோவில் பணியாற்றி வருகிறார். கருணாமூர்த்தி புதுபட்டியில் விவசாய வேலை பார்த்து வருகிறார்.

கடந்த வாரம் விழாவிற்கு புதுப்பட்டி வந்த ராதாகிருஷ்ணன், தங்க நகைகள் சென்னையில் வைப்பதற்கு பயந்து பழைய வீட்டில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கருணாமூர்த்தி இரவு புதிய வீட்டில் குடும்பத்துடன் உறங்கியுள்ளார். காலை எழுந்த பார்த்த போது இரண்டு வீட்டின் கதவும் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளிருந்த பீரோ உடைக்கப்பட்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டில் 2 பவுன், ராதாகிருஷ்ணன் வீட்டில் 11 பவுன் 3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரிக்கின்றனர்.

இதையும் படிக்க | திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்!

The robbery of 13 sovereigns of gold and 3 lakhs in cash from locked houses near Viralimalai has caused shock.

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க