செய்திகள் :

முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!

post image

ராணிப்பேட்டையில் விசிக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரும் நகர்மன்ற துணைத்தலைவருமான ரமேஷ்கர்ணாவும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், இந்து மதத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் வெறுப்பதில்லை; ஆனால், சனாதன தர்மத்தை நிச்சயமாக ஏற்காது. அந்த வகையில்தான், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கும் அரசுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கைகோர்த்துள்ளது.

எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் `ஏன் வேண்டாம்?’ என்று சொல்கிறீர்கள் என்று சிலர் கேட்கின்றனர். நான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் இல்லையா? நானும் ரௌடிதான் என்று யார்யாரோ கிளம்புகிறார்கள்..

ஆனால், கடந்த 35 ஆண்டுகளாக பொது வாழ்க்கையிலும், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையிலும் நான் இருக்கிறேன். முன்னாள் முதல்வ கருணாநிதியுடன் அரசியல் பேசியிருக்கிறேன். ஜெயலலிதாவுடனும் அரசியலில் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தற்போது, முதல்வர் ஸ்டாலினுடன் பயணிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

ஆனால், என்னை ஏன் துணை முதல்வர் என்று சொல்கிறீர்கள்? முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? இரண்டில் யார் அதிகாரம் படைத்தவர்கள் என்பது விவாதம் அல்ல. இருப்பினும், இவ்வாறான ஆசை காட்டினால் நான் வந்து விடுவேன் என்று சிலர் நினைக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!

Do I not deserve to be the CM says VCK Chief Thirumavalavan

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனு குறித்து முதல்வர் ஸ்டாலின்!

மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை... மேலும் பார்க்க