செய்திகள் :

போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்: டிரம்ப்

post image

தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மூன்று நாள்களாக மோதல்போக்கு நீடித்து வந்த நிலையில், தற்போது இருவரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான மோதல், அமெரிக்கா உடனான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என எச்சரித்ததைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்துள்ளதாக டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம் குறித்து ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது,

''இருதரப்பு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்தையும், அமைதியையும் எதிர்நோக்கியுள்ளன. இரு நாடுகளுடனும் அமெரிக்கா வணிகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதனால், இரு நாடுகளும் தொடர்ந்து மோதிக்கொண்டு இருந்தால், அவற்றுடன் எந்தவொரு ஒப்பந்தங்களும் மேற்கொள்ள விருப்பம் இல்லை. இதனை அவர்களிடம் தெரிவித்தேன். தாய்லாந்து பிரதமரிடம் இது குறித்து தொலைபேசியில் உடனடியாகப் பேசினேன்.

எண்ணற்ற மக்கள் இந்த போரில் கொல்லப்படுகின்றனர். இது வெற்றிகரமான போர் நிறுத்தமாகக் கருதப்படும், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நினைவூட்டுகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாகக் கூற வேண்டாம் என டிரம்ப்பிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பிறகும், தொடர்ந்து பொதுவெளிகளில் டிரம்ப் இவ்வாறு கூறி வருகிறார்.

தற்போது தாய்லாந்து - கம்போடியா இடையிலான போர் நிறுத்தத்தின்போதும் இந்தியா - பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அமெரிக்கா தரையை நோக்கிப் பாய்ந்த விமானம்

Reminds me of India-Pakistan conflict': Trump announces Thailand and Cambodia agree to hold ceasefire talks

காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்

காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும... மேலும் பார்க்க

173 பேருடன் சென்ற விமானத்தில் தீ! பயணிகள் பாதுகாப்பாக வெளியேறும் விடியோ!

அமெரிக்காவின் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து மியாமி புறப்பட்ட பயணிகள் விமானத்தின் டயரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், விப... மேலும் பார்க்க

வணிக வளாகத்தில் திடீர் கத்திக்குத்து! தாக்குதலால் 11 படுகாயம்; 6 பேர் கவலைக்கிடம்!

அமெரிக்காவில் தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவரின் திடீர் தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்தனர்.அமெரிக்காவில் மிக்ஸிகன் மாகாணம் டிராவர்சி நகரில் வால்மார்ட் வணிக வளாகத்தில் நுழைந்த ஒருவர், திடீரென ... மேலும் பார்க்க

அமெரிக்கா தரையை நோக்கிப் பாய்ந்த விமானம்

அமெரிக்காவில் சௌத்வெஸ்ட் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையை நோக்கிப் பாய்ந்ததில் 2 பணிப் பெண்கள் காயமடைந்தனா். அந்த விமானத்துக்கு அருகே மற்றொரு விமானம் வருவதாக ... மேலும் பார்க்க

காஸாவில் வான்வழியாக உணவுப் பொருள் விநியோகம்

இஸ்ரேல் முற்றுகையால் கடும் பஞ்சத்தைச் சந்தித்துவரும் காஸாவில் விமானம் மூலம் உணவுப் பொருள் விநியோகிக்கவிருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன் வந்துள்ள பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மற்ற... மேலும் பார்க்க

பெரு: பேருந்து விபத்தில் 18 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவின் ஆண்டிஸ் மலைப் பகுதி நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 18 போ் உயிரிழந்தனா்; 48 போ் காயமடைந்தனா். தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த இரட்டை அடுக்கு... மேலும் பார்க்க