செய்திகள் :

நாய்கள் தொல்லை! கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி!

post image

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தில் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகளும் பிரச்னைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்தாண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சாலை விபத்துகள், ரேபிஸ் தொற்று உள்பட பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், வேலை சென்றுவிட்டு இரவில் வீடுதிரும்பும் பெண்கள், முதியவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையில்தான், நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறை அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் மட்டுமே தெருநாய்கள் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் தெருநாய்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்து ஆவணங்களும் பாராமரிக்கப்பட வேண்டும் என்று அரசாணை கூறுகிறது.

இதையும் படிக்க:முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!

TN Govt allows Euthanasia of Stray dogs

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க