செய்திகள் :

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

post image

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மக்கள், அணை பகுதியை ஒட்டி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், துணி துவைக்கவோ, குளிக்கவோ அல்லது மற்ற பிற தேவைகளுக்காக ஆற்றப்படுகைக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.

120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 119.00 அடியை எட்டியது. பொள்ளாச்சி பகுதியில் 9.4 மி.மீ., மழை அளவு பதிவாகி உள்ள நிலையில் அணையிலிருந்து சனிக்கிழமை 11 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியாக சுமார் வினாடிக்கு 2,400 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு நீர்வரத்தைப் பொறுத்து மேலும் நீர் வெளியேற்றம் அதிகரிக்கவோ குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

As the water inflow to the Azhiyar Dam, next to Pollachi, continues to increase, a flood warning has been issued for residents along the banks after 2,400 cubic feet of water was released through 11 sluices to protect the dam.

மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை: துரை வைகோ

கோவை: மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார். கோவை ... மேலும் பார்க்க

அசைக்க முடியாத இயக்கமாக திமுகவை மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் சூளுரை

எந்த இயக்கத்திலும் இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகள் கிடையாது, இந்தியாவிலேயே அசைக்க முடியாத இயக்கமாக நம் திமுகவை மாற்றுவோம் என சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணிக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்ட... மேலும் பார்க்க

நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.நிகழாண்டு ... மேலும் பார்க்க

கார்கில் வெற்றி நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்

கார்கில் வெற்றி நாளையொட்டி, நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு இராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆ... மேலும் பார்க்க

3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 35, 400 கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,400 கன அடியிலிருந்து... மேலும் பார்க்க