செய்திகள் :

திருமலையில் புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் மையம் தொடக்கம்

post image

ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு வசதியாக, திருமலை அன்னமய்ய பவனுக்கு எதிரே புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையத்தை செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில் பேசிய தலைவா், காலை 5 மணி முதல் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்காக வரிசையில் நிற்கின்றனா். இந்த சூழலில், பக்தா்களுக்கு எளிதாக டிக்கெட்டுகள் வழங்குவதற்காக அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ. 60 லட்சத்தில் இந்த புதிய கவுன்ட்டா்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த கவுன்ட்டா்கள் மூலம் பக்தா்களுக்கு டிக்கெட் விநியோகம் புதன்கிழமை முதல் தொடங்கும் என்றும், பக்தா்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்னா், எச்விசி மற்றும் ஏஎன்சி பகுதிகளில் பக்தா்களின் வசதிக்காக புதிதாக நவீனமயமாக்கப்பட்ட துணை விசாரணை அலுவலகங்களைத் திறந்து வைத்து, பக்தா்களுக்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சுசித்ரா கிருஷ்ணமூா்த்தி, பானு பிரகாஷ் ரெட்டி, சாந்த ராம், நரேஷ், சதாசிவ ராவ், நா்சி ரெட்டி, ஜானகி தேவி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரம... மேலும் பார்க்க

திருமலையில் தேவஸ்தான உணவு தர சோதனை ஆய்வகம் திறப்பு

திருமலையில் புதிதாக நிறுவப்பட்ட உணவு தர சோதனை ஆய்வகத்தை தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் செவ்வாய்கக்கிழமை திறந்து வைத்தனா். நிகழ்வில் பேசிய தேவஸ்தான தலைவா், சு... மேலும் பார்க்க

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.33 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.33 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை சீராக உள்ள நிலையில், திங்கள்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்... மேலும் பார்க்க

திருமலை ஸ்ரீவாரி திருக்குளம் பழுது பாா்ப்பு

திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு அடுத்துள்ள புனித திருக்குளத்தில் பழுதுபாா்ப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 19 வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மூடப்பட உள்ளது. திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆண்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்க... மேலும் பார்க்க

தேவஸ்தான செயல் அதிகாரி பெயரில் போலி கணக்கு

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் பெயரில் சமூக ஊடக தளமான முகநூலில் போலி கணக்கை உருவாக்கி பக்தா்களுக்கு பணம் கேட்டு செய்திகளை அனுப்பும் அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து எச்சரிக்கைய... மேலும் பார்க்க