செய்திகள் :

ஜார்க்கண்ட்: "என்னைக் காணவில்லையா?" - 'காணவில்லை' போஸ்டருடன் வந்து புகாரளித்த இளைஞர்; என்ன நடந்தது?

post image

ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தில் உள்ள ஹன்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கெருவா கிராமத்தைச் சேர்ந்த முகமது இர்ஷாத் என்பவர், தன்னைக் காணவில்லை எனக் கூறி பொய்யான புகைப்பட போஸ்டர்களை வெளியிட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.

அந்த போஸ்டருடன் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் விசாரித்தபோது தன்னைக் காணவில்லை எனக் கூறி பொய்யான போஸ்டர்களை வெளியிட்டு, ஒரு கும்பல் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Missing Poster
Missing Poster

முகமது இர்ஷாத் தனது புகாரில், கடந்த இரண்டு மாதங்களாகச் சில இளைஞர்கள் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டை விட்டு வெளியே சென்றபோது, கிராமத்தின் பொது இடங்களிலும், கடைகளிலும் தனது புகைப்படத்துடன் கூடிய "காணவில்லை" என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.

இந்த போஸ்டர்களில், இர்ஷாத் கடந்த ஜூலை 5-ஆம் தேதி முதல் காணவில்லை என்றும், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் துன்புறுத்தலுக்குப் பின்னால், தன்னைத் தொடர்ந்து கேலி செய்யும் இளைஞர்களே இருப்பதாக இர்ஷாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இர்ஷாத் அனைத்து போஸ்டர்களையும் அகற்றியிருந்தாலும், அவருக்கு எதிரான துன்புறுத்தல் நிற்கவில்லை. சந்தைக்குச் செல்லும்போது இளைஞர்கள் அவரைக் கேலி செய்வதுடன், கற்களை வீசி தாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, நமாஸ் தொழுகைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரது மனைவிக்கு எதிராகவும் தவறாக நடந்து கொண்டதாக இர்ஷாத் குறிப்பிட்டுள்ளார். முகமது ஆதில், முகமது சோட்டு, முகமது ஆசாத், முகமது சைஃப் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார் இர்ஷாத்.

இந்தத் தொடர் துன்புறுத்தலால் தனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக இர்ஷாத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து ஹன்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Google: சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்திய AI - விவரம் என்ன?

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி குழுவான டீப்மைண்ட், உலகின் மிக உயரிய இளம் கணிதவியலாளர்களுக்கான போட்டியில் பங்கேற்றுள்ளது. சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் (IMO) கூகுளின் செயற்கை நுண்ணறிவு தங்கப்... மேலும் பார்க்க

World Tour: மாணவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் பள்ளி; எத்தனை லட்சம் செலவில் தெரியுமா?

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளி (CMS), தனது மாணவர்களுக்கு உலக அளவிலான அனுபவத்தை வழங்குவதற்காக ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: வீரர்களுக்குத் தண்ணீர், பால் வழங்கிய சிறுவன்; கல்விச் செலவை ஏற்ற இந்திய ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், கடந்த மே மாதம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்குப் பிறகான தாக்குதல்கள் நடந்து கொண்டு இருந்தன.இப்படிப் பதற்றத்திலிருந்த இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்று பஞ்சாப் மாநி... மேலும் பார்க்க

ரூ.2,700 கோடி சொத்து இருந்தும் சிக்கன ஷாப்பிங், தனிபாதை - எளிமையை விரும்பும் அக்‌ஷய்குமார் மகன் ஆரவ்

பாலிவுட்டில் பணக்கார நடிகர்களில் நடிகர் அக்‌ஷய் குமாரும் ஒருவர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிடுவார். அவருக்கு ரூ.2,700 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. அனைத்து பாலிவுட் வா... மேலும் பார்க்க

குஜராத்: பல் சிகிச்சை மேற்கொண்டவருக்குக் காதுகேளாமை சரியான வினோதம்; மருத்துவர்கள் சொல்வது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தில் கொசாம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்புன்னிஷா என்ற 63 வயது மூதாட்டி. இவருக்குக் கடந்த 20 ஆண்டுகளாகக் காதுகேட்பதில் சிக்கல் இருந்துள்ளது.கடைசி 10 ஆண்டுகள் மிக மோசமான நிலை இர... மேலும் பார்க்க

இமாச்சல் பிரதேசம்: ”எங்களுக்குப் பெருமைதான்” - ஒரே பெண்ணை மணந்த சகோதரர்கள்; பின்னணி என்ன?

இமாச்சல் பிரதேசத்தில் பாலியாண்ட்ரி என்ற பழமையான பாரம்பர்யத்தைப் பின்பற்றி, இரு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தத் திருமணம், பழங்கால பாரம்பர்யத்தைப் பின்பற்றுவதாகவும், தங்கள் க... மேலும் பார்க்க