செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: வீரர்களுக்குத் தண்ணீர், பால் வழங்கிய சிறுவன்; கல்விச் செலவை ஏற்ற இந்திய ராணுவம்!

post image

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், கடந்த மே மாதம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்குப் பிறகான தாக்குதல்கள் நடந்து கொண்டு இருந்தன.

இப்படிப் பதற்றத்திலிருந்த இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்று பஞ்சாப் மாநிலம் 'ஃபெரோஸ்பூர்'.

அங்கே உள்ள மம்டோட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங். அவர் அங்கே அதாவது எல்லை தாக்குதலில் பணியாற்றிக் கொண்டிருந்த ராணுவ வீரர்களுக்குத் தண்ணீர், டீ, பால், லஸ்ஸி, ஐஸ் போன்றவற்றை வழங்கி வந்தார்.

ஷ்ரவன் சிங்
ஷ்ரவன் சிங்

அதனால், இவரை இந்திய ராணுவம், 'இளம் சிவில் வீரர்' என்று அடையாளப்படுத்தியது.

7வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங் மன்ரால், ஷ்ரவனுக்குப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

'எனக்கு ஐஸ் கிரீம்...' - ஷ்ரவன்

இது குறித்து ஷ்ரவன், "பெரியவன் ஆகி, ராணுவ வீரர் ஆக வேண்டும் என்பது என் ஆசை.

நான் ராணுவ வீரர்களுக்கு உதவியதால், எனக்குச் சிறப்புப் பரிசு மற்றும் ஸ்பெஷல் மீல்ஸ் வழங்கினார்கள். எனக்கு ஐஸ் கிரீம்கூட கொடுத்தார்கள்" என்று மகிழ்ச்சியுடன் அப்போது தெரிவித்திருந்தார்.

ஷ்ரவன் தந்தை...

ஷ்ரவன் குறித்து அவரது தந்தை, "ராணுவ வீரர்கள் எப்போது எங்கள் ஊருக்கு வந்தார்களோ, அந்த முதல் நாளிலிருந்து எங்களது மகன் பால், லஸ்ஸி, தண்ணீர் மற்றும் ஐஸ் அவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தான்.

அவன் அதில் மிகச் சந்தோஷமாக இருந்ததால், நாங்கள் அவனைத் தடுக்கவில்லை. அவன் தொடர்ந்து ராணுவ வீரர்களைச் சந்தித்து வந்தான். அதில் எங்களுக்குப் பெருமை.

அவன் இப்போது ராணுவ வீரர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறான்" என்று அந்தச் சமயத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது, இந்தச் சிறுவனின் கல்விச் செலவை ராணுவத்தின் 'கோல்டன் ஏரோ டிவிஷன்' ஏற்கும் என்று ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Google: சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்திய AI - விவரம் என்ன?

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி குழுவான டீப்மைண்ட், உலகின் மிக உயரிய இளம் கணிதவியலாளர்களுக்கான போட்டியில் பங்கேற்றுள்ளது. சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் (IMO) கூகுளின் செயற்கை நுண்ணறிவு தங்கப்... மேலும் பார்க்க

World Tour: மாணவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் பள்ளி; எத்தனை லட்சம் செலவில் தெரியுமா?

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளி (CMS), தனது மாணவர்களுக்கு உலக அளவிலான அனுபவத்தை வழங்குவதற்காக ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும்... மேலும் பார்க்க

ரூ.2,700 கோடி சொத்து இருந்தும் சிக்கன ஷாப்பிங், தனிபாதை - எளிமையை விரும்பும் அக்‌ஷய்குமார் மகன் ஆரவ்

பாலிவுட்டில் பணக்கார நடிகர்களில் நடிகர் அக்‌ஷய் குமாரும் ஒருவர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிடுவார். அவருக்கு ரூ.2,700 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. அனைத்து பாலிவுட் வா... மேலும் பார்க்க

குஜராத்: பல் சிகிச்சை மேற்கொண்டவருக்குக் காதுகேளாமை சரியான வினோதம்; மருத்துவர்கள் சொல்வது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தில் கொசாம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்புன்னிஷா என்ற 63 வயது மூதாட்டி. இவருக்குக் கடந்த 20 ஆண்டுகளாகக் காதுகேட்பதில் சிக்கல் இருந்துள்ளது.கடைசி 10 ஆண்டுகள் மிக மோசமான நிலை இர... மேலும் பார்க்க

இமாச்சல் பிரதேசம்: ”எங்களுக்குப் பெருமைதான்” - ஒரே பெண்ணை மணந்த சகோதரர்கள்; பின்னணி என்ன?

இமாச்சல் பிரதேசத்தில் பாலியாண்ட்ரி என்ற பழமையான பாரம்பர்யத்தைப் பின்பற்றி, இரு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தத் திருமணம், பழங்கால பாரம்பர்யத்தைப் பின்பற்றுவதாகவும், தங்கள் க... மேலும் பார்க்க

கழுத்தில் பாம்புடன் பைக் ஓட்டிய நபர்; விஷக்கடியால் உயிரிழப்பு - என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் நபரை அவர் பிடித்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரகோகர் என்ற இடத்தில் வசிப்பவர் தீபக் மகாபர். அங்குள்ள பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க