செய்திகள் :

World Tour: மாணவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் பள்ளி; எத்தனை லட்சம் செலவில் தெரியுமா?

post image

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளி (CMS), தனது மாணவர்களுக்கு உலக அளவிலான அனுபவத்தை வழங்குவதற்காக ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், சமூக ஊடக பயனர் ஒருவர் சிட்டி மாண்டிசோரி பள்ளி மாணவர்களுடன் உரையாடுவது பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் ஆச்சரியத்துடன், "மாணவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் பள்ளி லக்னோவில் இருக்கிறதா?" என்று கேட்க, எங்கள் பள்ளி ஜெர்மனி அல்லது வியட்நாமுக்கும் அனுப்பி வைக்கத் திட்டமிடுகிறது என்று அந்த மாணவர்கள் கூறுகின்றனர். இது அவரை மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது.

Japan
Japan

"எங்கள் காலத்தில், எங்கள் பள்ளி எங்களை இந்தியா கேட் மட்டுமே அழைத்துச் செல்லும்" என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.

பயணச் செலவு குறித்துக் கேட்டபோது, ஒரு மாணவருக்கு 3.5 லட்சம் ரூபாய் என்றும் பயணம் 10 நாட்கள் என்றும் தெரிவிக்கின்றனர். மொத்தம் 64 மாணவர்கள் இப்பயணத்தில் பங்கேற்றதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.

பணம் செலுத்த முடிந்தவர்களும் இந்தப் பயணத்திற்கு வர முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். வீடியோவின் இறுதியில், "இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று புதிய கலாசாரங்களை அறிவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தகைய பயணங்கள் மாணவர்களின் பொறுப்புணர்வை வளர்க்கின்றன" என்று குறிப்பிட்டார்.

இந்த வீடியோ 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

School that takes students to Japan
School that takes students to Japan

இது குறித்து லக்னோவில் இருக்கும் சிட்டி மாண்டிசோரி பள்ளியின் (city montessori school) அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளதாவது, ”ஒவ்வொரு ஆண்டும், CMS, மாணவர்களிடையே உலகளாவிய கண்ணோட்டங்கள், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சமூகப் பொறுப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட 20க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த முக்கிய சிறப்பம்சங்களில் மத பிரார்த்தனை, உலக அமைதி பிரார்த்தனை மற்றும் உலக பாராளுமன்றம் ஆகியவை அடங்கும். உலகளாவிய உரையாடல் மற்றும் அனுபவத்தை ஊக்குவிக்கும் வகையில் இவை தொகுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Google: சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்திய AI - விவரம் என்ன?

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி குழுவான டீப்மைண்ட், உலகின் மிக உயரிய இளம் கணிதவியலாளர்களுக்கான போட்டியில் பங்கேற்றுள்ளது. சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் (IMO) கூகுளின் செயற்கை நுண்ணறிவு தங்கப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: வீரர்களுக்குத் தண்ணீர், பால் வழங்கிய சிறுவன்; கல்விச் செலவை ஏற்ற இந்திய ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், கடந்த மே மாதம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்குப் பிறகான தாக்குதல்கள் நடந்து கொண்டு இருந்தன.இப்படிப் பதற்றத்திலிருந்த இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்று பஞ்சாப் மாநி... மேலும் பார்க்க

ரூ.2,700 கோடி சொத்து இருந்தும் சிக்கன ஷாப்பிங், தனிபாதை - எளிமையை விரும்பும் அக்‌ஷய்குமார் மகன் ஆரவ்

பாலிவுட்டில் பணக்கார நடிகர்களில் நடிகர் அக்‌ஷய் குமாரும் ஒருவர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிடுவார். அவருக்கு ரூ.2,700 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. அனைத்து பாலிவுட் வா... மேலும் பார்க்க

குஜராத்: பல் சிகிச்சை மேற்கொண்டவருக்குக் காதுகேளாமை சரியான வினோதம்; மருத்துவர்கள் சொல்வது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தில் கொசாம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்புன்னிஷா என்ற 63 வயது மூதாட்டி. இவருக்குக் கடந்த 20 ஆண்டுகளாகக் காதுகேட்பதில் சிக்கல் இருந்துள்ளது.கடைசி 10 ஆண்டுகள் மிக மோசமான நிலை இர... மேலும் பார்க்க

இமாச்சல் பிரதேசம்: ”எங்களுக்குப் பெருமைதான்” - ஒரே பெண்ணை மணந்த சகோதரர்கள்; பின்னணி என்ன?

இமாச்சல் பிரதேசத்தில் பாலியாண்ட்ரி என்ற பழமையான பாரம்பர்யத்தைப் பின்பற்றி, இரு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தத் திருமணம், பழங்கால பாரம்பர்யத்தைப் பின்பற்றுவதாகவும், தங்கள் க... மேலும் பார்க்க

கழுத்தில் பாம்புடன் பைக் ஓட்டிய நபர்; விஷக்கடியால் உயிரிழப்பு - என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் நபரை அவர் பிடித்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரகோகர் என்ற இடத்தில் வசிப்பவர் தீபக் மகாபர். அங்குள்ள பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க