செய்திகள் :

15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!

post image

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டு வருவாய்க்கு பிறகு, ஜொமாடோ மற்றும் பிளிங்கிட் பிராண்டுகளுக்குச் சொந்தமான உணவு விநியோக மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல் பங்குகள் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தன.

பிஎஸ்இ-யில் பங்கின் விலை 14.89 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.60 ஆக இருந்தது. இது 52 வாரத்தின் அதிகபட்சம் விலையாகும்.

என்எஸ்இ-யில் இதன் விலை 14.55 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.25 ஐ எட்டியது. நேற்றைய வர்த்தகத்தில் எடர்னல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்தன.

எடர்னல் மீண்டும் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்றது பிளிங்கிட். 2024-25ஆம் ஆண்டின் 4வது காலாண்டு பிறகு எச்சரிக்கையான தொனிக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக ஜே.எம். பைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் தெரிவித்தது.

ஜூன் வரையான காலாண்டில் எடர்னல் ரூ.25 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியதாக அறிவித்தது. கடந்த மார்ச் மாதத்தில் எடர்னல் என பெயரை மாற்றிகொண்ட இந்த நிறுவனம், முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.253 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், செயல்பாடுகளிலிருந்து நிறுவனத்தின் வருவாய் ரூ.7,167 கோடியாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.4,206 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!

Shares of food delivery and quick commerce firm Eternal, which owns the Zomato and Blinkit brands, on Tuesday jumped nearly 15 per cent after its June quarter earnings announcement.

சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!

புதுதில்லி: சோலார் தகடுகளை தயாரிப்பாளர் மற்றும் இ.பி.சி. சேவை வழங்குநருமான சோலெக்ஸ் எனர்ஜி ஏப்ரல் முதல் ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் வருவாய் 84 சதவிகிதம் அதிகரித்து ரூ.260 கோடியாக உள்ளதாக தெரிவித்த... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.86.36 ஆக நிறைவு!

மும்பை: ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 25,060.90 புள்ளிகளாகவும் சென்செக்ஸ் 82,186.81 புள்ளிகளாக நிறைவு!

மும்பை: இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 337.83 புள்ளிகள் உயர்ந்து 82,538.17 ஆக இருந்தது. நேரம் செல்ல செல்ல வேகம் இழந்தது, 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 13.53 புள்ளிகள் சரிந்து 82,186.81 ஆகவும் 5... மேலும் பார்க்க

விவோ எக்ஸ் 200 எஃப்இ விற்பனை நாளை முதல் இந்தியாவில் தொடக்கம்!

விவோ எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான நிலையில், இதன் விற்பனை நாளை (ஜூலை 23) முதல் இந்திய சந்தைகளில் தொடங்கவுள்ளது. சிறந்த போட்டோகிராபி, பேட்டரி திறன், திரையின் தரம் ஆகியவ... மேலும் பார்க்க

லாபக் கணக்கில் ரிலையன்ஸ் பவர்! அனில் அம்பானியின் ஏறுமுகத்துக்கு என்ன காரணம்?

கடன், நஷ்டம் போன்ற செய்திகளால் மட்டும் பிரபலமடைந்து வந்த தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தற்போது, தொடர்ச்சியான காலாண்டுகளில் லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இ... மேலும் பார்க்க

ஜூலை 24-ல் அறிமுகமாகிறது ரியல் மீ 15 ப்ரோ! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரியல் மீ நிறுவனம் புதிதாக இரு மத்திய ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ரியல் மீ 15 மற்றும் ரியல் மீ 15 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் ஜூலை 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு அறிமுகமாகிறது. சீனாவை தலைமைய... மேலும் பார்க்க