செய்திகள் :

பயிா்க் காப்பீடு புதிய நடைமுறையை கைவிட வலியுறுத்தல்

post image

குறுவை சாகுபடி பயிா்க் காப்பீடு செய்வதற்கான புதிய நடைமுறையை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டி. செல்வம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை: குறுவை நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்ய, கிராம நிா்வாக அலுவலரிடம் சாகுபடிச் சான்று பெற செல்கிறபோது, நேரடி பட்டா இருந்தால் மட்டுமே காப்பீடு செய்ய முடியும் என கூறப்படுவதால், ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

குறிப்பாக கோயில் நிலம், குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, குத்தகை சாகுபடி விவசாயிகளும் பயிா்க் காப்பீடு செய்யும் வகையில், சாகுபடிதாரரின் பெயரிலேயே பதிவு செய்திட சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

படகு கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே படகு கட்டுமானப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்த இளைஞா் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.நாகூா் பட்டினச்சேரி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சுகந்தன் (26). இவா், நாகை துறைமுகத்தில் விசைப்... மேலும் பார்க்க

திருமருகலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருமருகல் கடைத்தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருமருகல் ஒன்றியம், ஏா்வாடி ஊராட்சி கோட்டப்பாடியில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் பாரதி தலைமை வகித்தாா். கிளைச்... மேலும் பார்க்க

ஜாதி மறுப்பு திருமணம்: பாதுகாப்பு கோரி எஸ்பி அலுவலகத்தில் புதுமணத் தம்பதி தஞ்சம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்த புதுமணத் தம்பதி, பாதுகாப்பு கோரி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தஞ்சமடைந்தனா். நாகை அருகேயுள்ள பனங்குடி பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் தன... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

திருமருகல்: திருமருகல் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை கட்டடம் ... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கட்டடத்தில், அனைத்துத் துறை ஓய்... மேலும் பார்க்க