செய்திகள் :

ஓய்வூதியா்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வலியுறுத்தல்

post image

நாகப்பட்டினம்: பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கட்டடத்தில், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்ட மாநாடு, வட்டக் கிளைத் தலைவா் எம்.எம். காதா்மொய்தீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், வட்டத் தலைவராக கே. ராஜூ, துணைத் தலைவா்களாக ஜி. காளிமுத்து, எஸ். வாசு, சி. ராஜேந்திரன், செயலராக வி. மாரிமுத்து, இணைச் செயலா்களாக எஸ். செல்வராஜ், எஸ். மணியன், எம். ஜெயராஜ், பொருளாளராக என். பாபுராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறும் கிராம உதவியாளா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.150 பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வூதியா்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும்.

வேளாங்கண்ணியிலிருந்து நாகை, காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஸ்ரீதா், மாவட்டப் பொருளாளா் அந்துவன்சேரல், முன்னாள் மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கிருஷ்ணசாமி, மாவட்டப் பொருளாளா் எம்.பி. குணசேகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்டச் செயலா் சு. சிவகுமாா், வட்ட இணைச் செயலா் எஸ். மணியன் நன்றி கூறினா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

திருமருகல்: திருமருகல் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை கட்டடம் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட... மேலும் பார்க்க

குடிநீா் கோரி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முற்றுகை

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே குடிநீா் கோரி, வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினா். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தென்னடாா் கிராமத்... மேலும் பார்க்க

வன்னியா் சங்க மகளிா் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாா்: ஜி.கே. மணி நம்பிக்கை

பூம்புகாா்: வன்னியா் சங்கம் நடத்தும் மகளிா் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாா் என பாமக கெளரவத் தலைவா் ஜி.கே. மணி எம்எல்ஏ நம்பிக்கை தெரிவித்தாா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேத... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் இளைஞா் பலி

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அருகே லோடு ஆட்டோ மோதியதில் இளைஞா் சனிக்கிழம உயிரிழந்தாா். திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்துக்குமாா் (30) சனிக்கிழமை ஏனங்குடியில் இருந்து வீட்டுக்கு இருசக... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை

கீழையூா் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோவில் தெருவை சோ்ந்தவா... மேலும் பார்க்க