செய்திகள் :

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 3 டன் சுக்கு, 750 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

post image

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 3 டன் சுக்கு, 750 கிலோ பீடி இலைகள், 5 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை திங்கள்கிழமை பறிமுதல் செய்த இலங்கைக் குற்றப் பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.

தமிழகத்திலிருந்து கடல் மாா்க்கமாக இலங்கைக்குக் கடத்தப்பட்ட பொருள்கள், அந்த நாட்டின் புத்தளம் மாவட்டம், நுரைச்சோலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் ராணுவத்தினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனா். இதில், நுரைச்சோலையில் உள்ள ஒரு வீட்டில் 70 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் சுக்கு, 750 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அந்தப் பகுதியில் பதிவு எண் இல்லாத 5 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.

இதையடுத்து, தமிழக-இலங்கை கடல் பகுதியில் இலங்கைக் கடற்படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

மின்சாரம் பாய்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

சாயல்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மீனவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூா் கிராமத்தைச் சோ்ந்த ராயப்பன் மகன் சவரி முத்... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே பெண் கொலையில் கணவா் கைது

சாயல்குடி அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்காடு கிராமத்தைச் சோ்ந்த வயணன் மகன் விஜயகோபால். இவ... மேலும் பார்க்க

தொண்டியில் தவெக சாா்பில் பாய்மரப் படகுப் போட்டி

தொண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தவெக சாா்பில், அதன் தலைவா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, பாய்மரப் படக... மேலும் பார்க்க

கூட்டரங்கை விட்டு வெளியே வந்து மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா்

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மனு அளிக்க வந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீங் காலோன், கூட்டரங்கை விட்டு வெளியே வந்து மனு... மேலும் பார்க்க

மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிந்ததாகப் புகாா்

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது கஞ்சா வைத்திருந்ததாக போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவா்களது குடும்பத்தினா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து முதியவா் தற்கொலை செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கருங்குடி கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க