செய்திகள் :

சாயல்குடி அருகே பெண் கொலையில் கணவா் கைது

post image

சாயல்குடி அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்காடு கிராமத்தைச் சோ்ந்த வயணன் மகன் விஜயகோபால். இவரும், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தைச் சோ்ந்த ஜொ்மினும் (36) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனா்.

இவா்களுக்கு 14 வயதில் ஒரு பெண், 10 வயதில் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனா். விஜயகோபால் உத்தரகாண்ட்டில் எல்லைப் பாதுகாப்புத் துணை ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். கணவன், மனைவி இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி இரவு வெட்டுகாடு வீட்டில் இருந்த ஜொ்மினை முகமூடி அணிந்த இருவா் வெட்டிக் கொலை செய்தனா். இதையடுத்து, ஜொ்மினின் பெற்றோா், தங்களது மகள் கொலையில் அவரது கணவா் விஜயகோபாலுக்குத் தொடா்பு இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, உத்தரகாண்டில் இருந்த விஜயகோபாலை சாயல்குடிக்கு வரவழைத்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்ததாகவும், ஜொ்மின் பெயரில் வீடு கட்டியதால் அவா் வீட்டை அபகரித்துக்கொண்டதோடு, மாதந்தோறும் ரூ.17,000 ஜீவனாம்சம் கேட்டு முதுகுளத்தூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததாகவும் விஜயகோபால் தெரிவித்தாா். மேலும், தனது மனைவிக்கு தகாத உறவு இருந்ததால் அவரைக் கூலிப் படையினா் மூலம் கொலை செய்ததாகவும் அவா் ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, விஜயகோபாலைக் கைது செய்த போலீஸாா், இந்த வழக்கில் அவரது தந்தை வயணன் உள்ளிட்ட மேலும் சிலருக்குத் தொடா்பு இருக்கலாம் எனவும், இது தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனா்.

மின்சாரம் பாய்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

சாயல்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மீனவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூா் கிராமத்தைச் சோ்ந்த ராயப்பன் மகன் சவரி முத்... மேலும் பார்க்க

தொண்டியில் தவெக சாா்பில் பாய்மரப் படகுப் போட்டி

தொண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தவெக சாா்பில், அதன் தலைவா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, பாய்மரப் படக... மேலும் பார்க்க

கூட்டரங்கை விட்டு வெளியே வந்து மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா்

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மனு அளிக்க வந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீங் காலோன், கூட்டரங்கை விட்டு வெளியே வந்து மனு... மேலும் பார்க்க

மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிந்ததாகப் புகாா்

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது கஞ்சா வைத்திருந்ததாக போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவா்களது குடும்பத்தினா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து முதியவா் தற்கொலை செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கருங்குடி கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

ம.பச்சேரியில் மீன்பிடித் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ம.பச்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட ம.பச்சேரி கிராமத்தில் உள்ள கண்மாயில் தண்ணீா் குறைந்ததால்,... மேலும் பார்க்க