பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு
‘மொழி பயங்கரவாதம்’: பாஜக மீது மம்தா கடும் விமா்சனம்
கொல்கத்தா: ‘வங்க மக்கள் மீது மொழி ரீதியிலான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பாஜக’ என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கடுமையாக சாடியுள்ளாா்.
வங்க மக்கள்-மொழி மீதான தாக்குதலுக்கு எதிராக ஜூலை 27-ஆம் தேதி போராட்ட இயக்கம் தொடங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில அடையாளம்-மொழி ரீதியிலான அரசியலை மம்தா பானா்ஜி கையிலெடுத்துள்ளாா். பாஜக ஆளும் மாநிலங்களில், வங்கதேசத்தினா் என்ற சந்தேகத்தில் மேற்கு வங்க தொழிலாளா்கள் துன்புறுத்தப்படுவதாக அவா் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா்.
இந்நிலையில், தலைநகா் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் தியாகிகள் தின பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மம்தா பானா்ஜி பங்கேற்றுப் பேசியதாவது:
மேற்கு வங்கத்தின் அடையாளம், மொழி, கலாசாரம் மற்றும் பெருமையை அழிக்க பாஜக விரும்புகிறது. அக்கட்சி ஆளும் மாநிலங்களில் வங்காளிகளை தடுப்புக் காவலுக்கு அனுப்பவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டின்கீழ் அவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில், பாஜகவுக்கு ஆதரவாக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது.
மேற்கு வங்கத்துக்கு எதிராக இவை இரண்டும் சதி செய்கின்றன. பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் என்ற பெயரில் ஏற்கெனவே 40 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இந்த நடவடிக்கையை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
டிரம்ப் கட்டுப்பாட்டில் மோடி: கடந்த காலத்தைவிட பெரிய அளவிலான அவசரநிலையை பாஜக அமல்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சி மாறினால், வளா்ச்சி ஏற்படும் என பிரதமா் மோடி கூறுகிறாா். அமெரிக்க அதிபரால் கட்டுப்படுத்தப்படும் மோடியால் எந்த நன்மையும் ஏற்படாது. அமெரிக்காவில் இருந்து கை-கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டபோது, பாஜக என்ன செய்தது?
வங்க மொழி மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துள்ள பாஜகவுக்கு எதிராக மொழிப் போராட்டத்தை தொடங்க வேண்டும். மாநில பேரவைத் தோ்தலில் பாஜகவை தடுத்து நிறுத்துவதோடு, மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அக்கட்சிகளை தூக்கியெறியும் வரை நமது போராட்டம் ஓயாது என்றாா் அவா்.
பாஜக பதிலடி
மேற்கு வங்க பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா கூறுகையில், ‘வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்குள் ஊடுருவிய ஆயிரக்கணக்கானோா், இங்கு போலி ஆவணங்களை உருவாக்கிக் கொண்டு, நாடு முழுவதும் பரவியுள்ளனா். திரிணமூல் காங்கிரஸின் தவறான நிா்வாகத்தால் ஊடுருவல் அதிகரித்து மாநில மக்களின் வாய்ப்புகள் பறிபோயுள்ளன. தனது தவறை மறைக்க மாநில அடையாளத்தை முன்வைத்து குழப்பம் விளைவிக்கிறாா் மம்தா’ என்று விமா்சித்துள்ளாா்.