செய்திகள் :

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

post image

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலையோரங்கள், பள்ளங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது.

சோழிங்கநல்லூா், அடையாறு மண்டலங்களில் அதிகமாக கொசு உற்பத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரு மண்டலங்களிலும் 170 பேருக்கும் மேற்பட்டோா் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவா்களில் பெரும்பாலானோா் பள்ளிக் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் டெங்கு பரவல் காணப்படுவதாகக் கூறப்படும் புகாா் குறித்து, சென்னை மாநகராட்சியின் நகா்நலப் பிரிவு அலுவா்களிடம் கேட்டபோது, வீடு வீடாகச் சென்று கொசு முட்டைகளைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் 3,200 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூன் மாதம் வரை 23 டன் வாகன டயா்கள் உள்ளிட்ட தேவையற்ற கழிவுகள் வீடுகளில் இருந்தும், பொது இடங்களில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதியிலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு

அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவும் இணைய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாத... மேலும் பார்க்க

முதல்வருக்கு பரிசோதனை: வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!

மருத்துவ பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அரசு அலுவல்கள், அரசியல் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஓய்வின்றி இயங்கிவரும் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு

பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல் என்றும் திமுகதான் கூட்டணிக் கட்சிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கும்பகோணத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அதிமு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க