செய்திகள் :

கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

post image

`Final Destination Bloodlines படத்தில் ஒரு காட்சியில், கற்பனைக் கூட செய்ய முடியாதளவு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் ஒருவர் கொடூரமாக உயிரிழப்பார். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.

நியூயார்க்கின் லாங் தீவில் உள்ள வெஸ்ட்பரியில் உள்ள நாசாவ் ஓபன் எம்.ஆர்.ஐ செயல்பட்டு வருகிறது. முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்றுவரும் அட்ரியன் ஜோன்ஸ் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் தன் முழங்காலை ஸ்கேன் செய்திருக்கிறார். அப்போடு எழுந்திக்க, அவரின் 61 வயது கணவரை உதவிக்காக அழைத்திருக்கிறார்.

அப்போது அவர் கழுத்தியில் இரும்பு செயின் ஒன்றை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறைக்கு வந்தவுடன் அவர் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார். இதில் நிலைகுலைந்துப்போன அவரைக் காப்பாற்ற அறையில் இருந்த உதவியாளர்கள் முயன்றும் பலனளிக்கவில்லை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்கேன்
ஸ்கேன்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, ``பாதிக்கப்பட்ட நபர் அனுமதி இன்றி எம்.ஆர்.ஐ அறைக்குள் நுழைந்திருக்கிறார். கழுத்தில் ஒரு பெரிய உலோகச் சங்கிலியை அணிந்திருந்தார், இதனால் அவர் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கிறார்" என்றது.

தன் கணவரைப் பலி கொடுத்த ஜோன்ஸ்-மெக்காலிஸ்டர், ``நாங்கள் இந்த மருத்துவமனைக்கு வருவது இது முதல்முறையல்ல. என் கணவர் அணிந்திருந்த செயினும் புதியதல்ல. ஊழியர்களுக்கு ஏற்கெனவே இது தெரியும்."என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கூடலூர்: யானை மிதித்து உயிரிழந்த தொழிலாளி; யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் பலியாகும் அப்பாவிகள்..

யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் மேலும் ஒரு உயிர் பறிபோயிருக்கும் துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டே... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி... 3 பேர் படுகாயம் - சிவகாசியில் தொடரும் சோகம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 90% பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவு... மேலும் பார்க்க

வங்கதேசம்: பள்ளியில் விழுந்த போர் விமானம்; 19 பேர் பலி- நடந்தது என்ன?

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துக்குள்ளாகி இருக்கிறது.வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 7 ... மேலும் பார்க்க

Sleeping Prince: 20 ஆண்டுகள் கோமாவில் வாழ்வு; செளதி அரேபியா இளவரசர் அல் வகீத் காலமானார்..

'ஸ்லீப்பிங் பிரின்ஸ்' என்று பரவலாக அறியப்படும் செளதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் காலமாகியிருக்கிறார். கடந்த இருபது வருடங்களாக அவர் கோமா நிலையில் இருந்தார். ஒரு கார் விபத்தினால்தான் அவர் கோமா நிலைக்க... மேலும் பார்க்க

நீலகிரி: மின் கம்பத்தின் கீழ் காயங்களுடன் இறந்து கிடந்த பெண் சிறுத்தை; வனத்துறை சொல்வது என்ன?

சிறுத்தைகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நீலகிரி வனக்கோட்டத்தில் மேலும் ஒரு பெண் சிறுத்தையின் பரிதாப இழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்... மேலும் பார்க்க

பள்ளி சைக்கிள் ஷெட் மீது விழுந்த காலணி; எடுக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி.. கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வலியபாடத்தைச் சேர்ந்த மனு என்பவரது மகன் மிதுன்(13). தேவலக்கரை பகுதியில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். நேற்று பள்ளிக்குச் சென்றபோது மாணவ... மேலும் பார்க்க