செய்திகள் :

நம்பிக்கை இருந்தால் கருண் நாயருக்குப் பதில் சுந்தர்! - கேப்டன் கில்லுக்கு அஸ்வின் அறிவுரை

post image

நம்பிக்கை இருந்தால் கருண் நாயருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை களமிறக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில்’ விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இங்கிலாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கிறது. இந்தத் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 4-வது போட்டி மான்செஸ்டரில் நாளை(ஜூலை 22) தொடங்குகிறது.

கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் களமிறங்கும் இந்திய அணியில், வீரர்கள் ஒவ்வொருவராக காயமடைந்து வருவது இந்திய அணிக்கும் மிகவும் பின்னடைவாக அமைந்துள்ளது. நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் விலகிய நிலையில், அன்ஷுல் காம்போஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசும்போது, “குல்தீப் விளையாட வேண்டும் என்று நிறைய பேர் கூறியுள்ளனர். வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங்கில் உங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தால், அவரை 3-வது இடத்தில் விளையாட வைத்துவிட்டு குல்தீப்பையும் அணியில் விளையாட விடுங்கள்.

உங்களுக்கு ஒரு வழி இருக்கிறது. கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் அல்லது வாஷிங்டன் சுந்தரை கொண்டு வர விரும்புகிறீர்களா? நான் இப்படித்தான் யோசிப்பேன்.

நிதிஷ் குமார் காயம் காரணமாக விளையாடவில்லை. நிதிஷ் தயாராக விளையாடவில்லை என்றால், நான் ஷர்துல் தாக்கூரை கொண்டு வரலாமா? அல்லது நான் ஒரு சிறப்பு பேட்டரை விளையாட வைக்க விரும்புகிறேனா? என சிந்திப்பேன்.

வாஷிங்டனை விளையாட வைக்க விரும்புவேன். ஜடேஜாவும் இருப்பார். ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக, சாய் சுதர்ஷன் அல்லது துருவ் ஜாரெலை விளையாட வையுங்கள்” எனத் தெரிவித்தார்.

‘If you have lot of faith in Washington Sundar, bat him at No.3 instead of Karun’: Ashwin to Gambhir and Shubman Gill

இதையும் படிக்க :4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

ஹர்மன்ப்ரீத் சதம்: தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 318 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை இந்திய மகளிரணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க

4-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார்: ஷுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: நியூசி.க்கு 135 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றை... மேலும் பார்க்க

கோலியைப் போலச் செய்வதை ஷுப்மன் கில் நிறுத்த வேண்டும்: மனோஜ் திவாரி

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் விராட் கோலியைப் போல் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டுமென மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி... மேலும் பார்க்க

மான்செஸ்டர் ஆடுகளத்தை பார்வையிட்ட இங்கிலாந்து பயிற்சியாளர், கேப்டன்!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மான்செஸ்டர் ஆடுகளத்தை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பார்வையிட்டனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்... மேலும் பார்க்க