செய்திகள் :

Google: சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்திய AI - விவரம் என்ன?

post image

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி குழுவான டீப்மைண்ட், உலகின் மிக உயரிய இளம் கணிதவியலாளர்களுக்கான போட்டியில் பங்கேற்றுள்ளது. சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் (IMO) கூகுளின் செயற்கை நுண்ணறிவு தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.

முதல் முறையாக, ஒரு AI அமைப்பு ஆறு சிக்கலான கணக்குகளில் ஐந்தை வெற்றிகரமாக தீர்த்து, மனிதர்களுக்கு இணையான கணிதத் திறனை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த கணக்குகளில் இயற்கணிதம், கூட்டியல், வடிவியல் மற்றும் எண் கோட்பாடு ஆகியவை அடங்கும்.

AI
AI

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் உள்ள கணக்குகள் மிகவும் கடினமானவை. இவற்றை தீர்க்க, கணிதத்தில் ஆழமான புரிதல் தேவை. இதுவரை AI அமைப்புகளால் இந்த அளவு திறனை அடைய முடியவில்லை.

ஆனால், கூகுளின் மேம்படுத்தப்பட்ட ஜெமினி டீப் திங்க் (Gemini Deep Think) என்ற AI மாதிரி தங்கப் பதக்க மதிப்பெண்ணை (42-ல் 35 புள்ளிகள்) பெற்று அசத்தியுள்ளது.

"கூகுள் டீப் திங்க் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. அவற்றின் தீர்வுகள் தெளிவாகவும், துல்லியமாகவும் இருந்தன. மேலும், பெரும்பாலானவை எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவையாக இருந்தன" என்று சர்வதேச கணித ஒலிம்பியாட் தலைவர் டாக்டர் கிரெகோர் டோலினார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, டீப் திங்கின் ஆல்ஃபாப்ரூஃப் மற்றும் ஆல்ஃபாஜியோமெட்ரி (AlphaProof and AlphaGeometry) 2 அமைப்புகள் இணைந்து வெள்ளிப் பதக்க தரத்தை அடைந்தன.

ஆனால், அப்போது முடிவுகளை பெற இரண்டு முதல் மூன்று நாட்கள் தேவைப்பட்டன. இந்த ஆண்டு 4.5 மணி நேரத்தில் முடிவுகளை வழங்கியுள்ளது.

World Tour: மாணவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் பள்ளி; எத்தனை லட்சம் செலவில் தெரியுமா?

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளி (CMS), தனது மாணவர்களுக்கு உலக அளவிலான அனுபவத்தை வழங்குவதற்காக ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: வீரர்களுக்குத் தண்ணீர், பால் வழங்கிய சிறுவன்; கல்விச் செலவை ஏற்ற இந்திய ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், கடந்த மே மாதம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்குப் பிறகான தாக்குதல்கள் நடந்து கொண்டு இருந்தன.இப்படிப் பதற்றத்திலிருந்த இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்று பஞ்சாப் மாநி... மேலும் பார்க்க

ரூ.2,700 கோடி சொத்து இருந்தும் சிக்கன ஷாப்பிங், தனிபாதை - எளிமையை விரும்பும் அக்‌ஷய்குமார் மகன் ஆரவ்

பாலிவுட்டில் பணக்கார நடிகர்களில் நடிகர் அக்‌ஷய் குமாரும் ஒருவர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிடுவார். அவருக்கு ரூ.2,700 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. அனைத்து பாலிவுட் வா... மேலும் பார்க்க

குஜராத்: பல் சிகிச்சை மேற்கொண்டவருக்குக் காதுகேளாமை சரியான வினோதம்; மருத்துவர்கள் சொல்வது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தில் கொசாம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்புன்னிஷா என்ற 63 வயது மூதாட்டி. இவருக்குக் கடந்த 20 ஆண்டுகளாகக் காதுகேட்பதில் சிக்கல் இருந்துள்ளது.கடைசி 10 ஆண்டுகள் மிக மோசமான நிலை இர... மேலும் பார்க்க

இமாச்சல் பிரதேசம்: ”எங்களுக்குப் பெருமைதான்” - ஒரே பெண்ணை மணந்த சகோதரர்கள்; பின்னணி என்ன?

இமாச்சல் பிரதேசத்தில் பாலியாண்ட்ரி என்ற பழமையான பாரம்பர்யத்தைப் பின்பற்றி, இரு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தத் திருமணம், பழங்கால பாரம்பர்யத்தைப் பின்பற்றுவதாகவும், தங்கள் க... மேலும் பார்க்க

கழுத்தில் பாம்புடன் பைக் ஓட்டிய நபர்; விஷக்கடியால் உயிரிழப்பு - என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் நபரை அவர் பிடித்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரகோகர் என்ற இடத்தில் வசிப்பவர் தீபக் மகாபர். அங்குள்ள பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க