செய்திகள் :

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

post image

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.

இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் விமானமும் மிக்-21 அளவுக்கு நீண்ட காலம் சேவையில் இருந்ததில்லை. கடந்த 1960-ஆம் ஆண்டுகளில் முதன்முறையாக மிக்-21 விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர், இந்தியாவின் போர் திறனை மேம்படுத்த 870-க்கும் மேற்பட்ட மிக்-21 ரக விமானங்கள் வாங்கப்பட்டன.

1965, 1971-ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர்கள், 1999 கார்கில் மோதல், 2019 பாலாகோட் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றில் மிக்-21 விமானங்கள் முக்கியப் பங்காற்றின.

எனினும், மிக்-21 விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் காரணத்தால், அவை "பறக்கும் சவப்பெட்டி' என்ற அவப்பெயரையும் ஈட்டியது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் சில பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

"பாந்தர்ஸ்' என்றழைக்கப்படும் விமானப் படையின் 23-ஆம் படைப்பிரிவின் வசமுள்ள இறுதி மிக்-21 விமானங்களுக்கு சண்டீகர் விமானப்படை தளத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி பிரியாவிடை அளிக்கப்படுகிறது. மிக்-21 விமானங்களுக்குப் பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "தேஜஸ்' இலகுரக போர் விமானங்களை சேவையில் இணைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி, 83 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.48,000 கோடிக்கு கடந்த 2019, பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்தது.

இந்த விமானங்களைத் தயாரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இச்சூழலில், மேலும் 97 தேஜஸ் விமானங்களை சுமார் ரூ.67,000 கோடி செலவில் வாங்குவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது.

மோடியின் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் யாருக்கு சாதகம்?! கார்கள், விஸ்கி விலை குறையுமா?

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறார். பிரிட்டனில் மேற்கொள்ளப்படும் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களால் யாரு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

நமது நிருபர்உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க