செய்திகள் :

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

post image

நமது சிறப்பு நிருபர்

நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது இத்தகைய வசதிகள் சர்வதேச விமான நிலையங்களில் மட்டுமே உள்ளன. விமான பயணிகள் தங்களின் உடலுக்குள் ஏதேனும் அனுமதியற்ற அல்லது தடை செய்யப்பட்ட பொருள்களை மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறிய பாடி ஸ்கேனர்கள் உதவுகின்றன.

2023, டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர் மாடத்தில் இருந்து இரண்டு பேர் கீழே குதித்து வண்ண ஸ்ப்ரே அடித்த சம்பவம் அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் முயற்சித்த அதே நாளில் இந்த அத்துமீறல் நடந்தது.

இதன் பிறகு நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியை கவனித்து வந்த மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மக்களவை, மாநிலங்களவைச் செயலக பாதுகாவலர்கள் வசம் இருந்த பாதுகாப்பு முழுவதையும் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை(சிஐஎஸ்எஃப்) வசம் மத்திய அரசு ஒப்படைத்தது.

டிஜிபிக்கு அதிகாரம்: கூடுதல் அம்சமாக, சிஐஎஸ்எஃப் படையினரே நாடாளுமன்றத்துக்குள் வரும் அதிகாரிகள், பொதுமக்கள், எம்.பி.க்களின் விருந்தினர்கள், நாடாளுமன்ற பணிக்காக வரும் வெளி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி நுழைவுச்சீட்டு வழங்கும் பணியை கவனித்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் நீங்கலாக மற்ற அனைவரும் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு வளாகம் மற்றும் அரங்குக்குள் நுழையும்போதும் கடுமையான சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். இதை மேலும் கடுமையாக்கும் வகையில் முழு பாடி ஸ்கேனர்கள் சாதனங்களை நிறுவும் சிஐஎஸ்எஃப் முன்மொழிவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்றுக்கொண்டது.

இதைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்பது இடங்களில் இந்த பாடி ஸ்கேனர் கருவிகளை நிறுவ சிஐஎஸ்எஃப் திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கான கொள்முதல் அதிகாரத்தை சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநருக்கு மத்திய உள்துறை வழங்கியுள்ளது.

கொள்முதல் நிபந்தனைகள்: இதன்படி, கொள்முதல் செய்யப்படும் கருவிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், திரவநிலை மற்றும் மருந்து வகை, உலோகம், உலோகம் அல்லாத பொருள்கள் போன்றவற்றை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவை அயனியாக்கம் மற்றும் அயனியாக்கம் அல்லாத மின்காந்த கதிர் வீச்சுத்திறன் கொண்டவையாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை நிபந்தனை விதித்துள்ளது.

மேலும், இந்த ஸ்கேனர் உயரத்தில் 2.0 மீட்டர் முதல் 2.75 மீட்டரும் அகலத்தில் 1.0 முதல் 1.6 மீட்டரும், நடக்கும்போது 0.5 மீட்டர் முதல் 1 மீட்டர் தூரத்துக்குள்ளாக பரிசோதனை தரவுகளை திரையில் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உலக அளவில் இத்தகைய பாடி ஸ்கேனர்கள், அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளன. அவற்றின் வரிசையில் இந்தியாவும் இத்தகைய வசதியை விரைவில் கொண்டிருக்கும் என்கின்றனர் உள்துறை அமைச்சக உயரதிகாரிகள்.

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

நமது நிருபர்உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க முயற்சி: மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர்இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.மக்கள... மேலும் பார்க்க