செய்திகள் :

``சம்பாதித்து சாப்பிடுங்க..'' - ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்

post image

விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு சாதகமான மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, இருவருக்கும் திருமணமாகி 18 மாதங்கள்கூட ஆகாத நிலையில் இருவரும் விவாகரத்து முடிவுக்கு சென்றிருப்பதால், கணவரிடமிருந்து தனக்கு ஜீனாம்சமாக ரூ. 12 கோடியும், பி.எம்.டபிள்யு காரும் வேண்டுமென்று மனைவி கோரிக்கை வைத்திருக்கிறார்.

விவாகரத்து
விவாகரத்து

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "நீங்கள் நன்கு படித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நீங்கள் சம்பாதிக்க வேண்டும். உங்கள் திருமணம் 18 மாதங்கள் நீடித்தது.

இப்போது உங்களுக்கு பி.எம்.டபிள்யு காரும், மாதம் ஒரு கோடி ரூபாயும் வேண்டுமா?

எம்.பி.ஏ படித்து ஐ.டி துறையில் அனுபமிக்கவராக இருக்கும்போது நீங்கள் ஜீவனாம்சத்தை நம்பியிருக்கக் கூடாது.

படித்திருக்கும்போது உங்களுக்காக நீங்கள் யாசகம் கேட்கக் கூடாது. நீங்களே சம்பாதித்து சாப்பிட வேண்டும்." என்றார்.

அப்போது, தனது கணவர் பணக்காரர் என்றும், தனக்கு ஸ்கிசோஃப்ரினியா (schizophrenia - mental disorder) இருப்பதாகக் கூறி திருமணத்தை ரத்து செய்யக் கூட முயன்றதாகவும் தெரிவித்த அந்தப் பெண், "நான் ஒரு ஸ்கிசோஃப்ரினியா நோயாளியைப் போல இருக்கிறேனா?" என்று கேட்டார்.

மறுபக்கம், கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஜீவனாம்சத்தை இவ்வளவு ஆடம்பரமாக கோர முடியாது.

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரும் வேலைக்குச் செல்ல வேண்டும். எல்லாவற்றையும் இப்படிக் கேட்க முடியாது" என்றார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பின்னர், கணவரின் கடந்த கால வருமானம், ரூ. 2.5 கோடி சம்பளம் என்பதையும், பணியில் இருந்தபோது ரூ.1 கோடி போனஸ் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார் என்பதையும் கவனித்த தலைமை நீதிபதி, இரு தரப்பினரும் முழுமையான நிதி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், கணவருடைய தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியாது என்று வலியுறுத்திய தலைமை நீதிபதி இரண்டு சாய்ஸ் கொடுத்தார்.

ஒன்று, அடுக்குமாடி குடியிருப்பைப் பெற்றுக்கொள்வது அல்லது ரூ. 4 கோடி பெற்றுக்கொள்வதுடன் புனே, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் ஐ.டி வேலை தேடுவது.

பின்னர், இறுதி உத்தரவுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Bengaluru Stampede: 'விராட் கோலியின் அந்த வீடியோ...' -ஆர்.சி.பி மீது குற்றம் சுமத்தும் கர்நாடகா அரசு

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் கடந்த ஜூன் மாதம் ஆர்.சி.பி அணி ஐ.பி.எல் கோப்பை வென்றதைக் கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு ஆர்.சி.பி அணி நிர்வாகமே காரணம... மேலும் பார்க்க

திண்டுக்கல் சட்ட விரோத குவாரிகள்: "அதிகாரிகளின் கூட்டுச் சதியா?" - உயர்நீதிமன்றம் கேள்வி

குவாரியின் முன் பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என்று, சட்டவிரோதக் குவாரிகள் மீதான வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்ட தகவலால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆ... மேலும் பார்க்க

`வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி; ஆதார் ஏன் இல்லை?’ - உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி | முழு விவரம்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதமே வாக்காளர் இறுதிப்பட்டியலை தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. பிறகு திடீர் அறிவிப்பாக அனைத்து வ... மேலும் பார்க்க

நெல்லை: `ஆதரவற்ற பாட்டியின் வீட்டை மீட்டுக்கொடுத்த காவல்துறை' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த போலீஸார்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி. 70 வயதான இம்மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். இவரது ஆதரவற்ற நிலையை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், ரொக்கமாகவும் காசோலை மூலம... மேலும் பார்க்க

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞர்: 4 மாத சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்! - என்ன நடந்தது?

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் இருதரப்பையும் விசாரித... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா இதே வழக்கில் கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க