செய்திகள் :

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்

post image

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. எனினும் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளால் கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறிவரும் நிலையில், அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் எனவும் ஆட்சியில் பங்குகொடுக்க நாங்கள் ஏமாளி அல்ல என இபிஎஸ் கூறி வருகிறார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் கூட்டு அமைச்சரவைதான் இருக்கும். ஆட்சி, அதிகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும்.

மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தும் கூட்டணி ஆட்சிதான் அமைந்தது. அதேபோல தமிழ்நாட்டிலும் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும்.

திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா அதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். முதல்வர் யார் என்பதை அமித் ஷாவிடம் கேட்பது சரியாக இருக்கும்" என்று கூறினார்.

AMMK General Secretary TTV Dinakaran has said that Even if AIADMK gets a majority, NDA parties will be part of government in Tamil Nadu.

சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தம்! எங்கெங்கு?

சென்னையில் புதிதாக நான்கு இடங்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.8 கோடியில், இந்த... மேலும் பார்க்க

வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு புடவை: ஜெயலலிதா வழியில் இபிஎஸ்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு, பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் இன்று விவசாய... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்ட அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல்நிலையில் ம... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலையம்; ரூ.4,500 கோடி திட்டங்களை துவக்கி வைக்கும் மோடி - நயினார் நாகேந்திரன்

திருச்சி: தூத்துக்குடி புதிய விமான நிலைய துவக்க விழாவில் 4500 கோடி ரூபாய் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.தமிழக முதல்வர் எனக்கு நெருங்கிய நண்பர் - என் தொகுதி மக்கள் கோரிக்கைகளை செய்து கொடுத்... மேலும் பார்க்க