தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 82,726.64 புள்ளிகளாகவும், நிஃப்டி 25,219.90 புள்ளிகளுடன் நிறைவு!
மும்பை: ஜப்பான் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்தும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கைத் தொடர்ந்து, இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 539.83 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நிஃப்டி 25,219.90 புள்ளிகளாக நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 599.62 புள்ளிகள் உயர்ந்து 82,786.43 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 539.83 புள்ளிகள் உயர்ந்து 82,726.64 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 159 புள்ளிகள் உயர்ந்து 25,219.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் இந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை சரிந்தன.
நிஃப்டி-யில் டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், அப்பல்லோ மருத்துவமனைகள், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் டாடா கன்ஸ்யூமர், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிந்தன.
துறைகளில் இன்று ரியல் எஸ்டேட் குறியீடு 2.6 சதவிகிதமும், எஃப்எம்சிஜி குறியீடு 0.5 சதவிகிதம் சரிந்தது. ஆட்டோ, உலோகம், எண்ணெய் & எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், மருந்து, தனியார் வங்கி, பொதுத்துறை வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனம் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை உயர்ந்து முடிவடைந்தன.
பேடிஎம் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்த நிலையில் பலவீனமான முதல் காலாண்டு முடிவுகளை அடுத்து கோல்கேட் பாமோலிவ் பங்குகள் இன்று 52 வார குறைந்த அளவை எட்டியது.
வலுவான Q1 காலாண்டு முடிவுகளை அடுத்து டிக்சன் டெக்னாலஜிஸ் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்தன. லாப வளர்ச்சியில் இந்திய ரயில்வே நிதி நிறுவனம் லிமிடெட் பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.
தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட அட்காக் இங்கிராம் ஹோல்டிங்ஸ் கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து நாட்கோ பார்மாவின் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்தன. வலுவான காலாண்டு வருவாய் காரணமாக பஞ்சாப் தேசிய வங்கி பங்குகள் 8 சதவிகிதம் அதிகரித்தது.
ரூ.175 கோடி மதிப்புள்ள ஆர்டர் கைப்பற்றியதை அடுத்து சூர்யா ரோஷ்னி பங்குகள் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் உயர்ந்தன.
ஜேஎம் ஃபைனான்சியல், கிரெடிட் அக்சஸ் கிராமீன், எல்டி ஃபைனான்ஸ், பேடிஎம், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஆனந்த் ரதி, கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனம் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ராம்கோ சிமென்ட்ஸ், குஜராத் மினரல், விஷால் மெகா மார்ட் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.
இன்று ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.3,548.92 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,239.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.45 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 68.29 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: 15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!
Benchmark Sensex jumped nearly 540 points while Nifty closed above the 25,200 level on Wednesday following a positive trend in Asian markets after Japan secured a trade deal with the US.