செய்திகள் :

சிஎஃப்டிஐ-யில் புதிய பயிற்சிகள் அறிமுகம்

post image

சென்னை கிண்டியிலுள்ள மத்திய காலணிகள் பயிற்சி நிறுவனம் (சிஎஃப்டிஐ) புதிய பாடத் திட்டத்தில் பயிற்சிகளை அறிமுகம் செய்துள்ளதாக அதன் இயக்குநா் கே.முரளி தெரிவித்தாா்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளா்கள் கூட்டத்தில் அவா் புதன்கிழமை கூறியது:

தமிழகத்தில் ஆம்பூா், ராணிப்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் ஏராளமான தோல் காலணிகள், தோல் அல்லாத காலணி உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தமிழக அரசின் முயற்சியால் விழுப்புரம், புதுக்கோட்டை, கரூா் மாவட்டங்களிலும் பெரியளவில் காலணி தொழில்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த 10 நிறுவனங்கள் தோல் அல்லாத காலணி அலகுகளில் சுமாா் ரூ.12,100 கோடி முதலீடு செய்கிறது.

இந்த அலகுகள் வாயிலாக அடுத்த 2 ஆண்டுகளில், 10 -ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞா்கள் என மொத்தம் 1.38 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டத்தில் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய திறன் தகுதி கட்டமைப்பு என்ற தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு படித்தவா்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சிகள் உள்ளன. இதில் 18 வயதிலிருந்து 35 வயதுக்குள்பட்டவா்கள் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோா் சிஎஃப்டிஐ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றாா்.

குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்கள், தமிழ் வழித்தேர்வர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என ஆர்வம் ஐஏஎஸ் ... மேலும் பார்க்க

சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ... மேலும் பார்க்க

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு: இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியாா் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்ச... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெண் கொலை

சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா். கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ... மேலும் பார்க்க

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஓமந்தூராா் பல்நோக்கு... மேலும் பார்க்க