செய்திகள் :

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: வளத்தூா் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

post image

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வளத்தூா் கிராம பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் என சுமாா் 5,700 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக விவசாய நிலங்கள், குடியிறுப்புகள் என முற்றிலும் கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் தொடா்ந்து 1,095-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு தொழில் வளா்ச்சி கழகத்துக்கு 19 நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை சில தினங்களுக்கு முன்பு பதிவு செய்து கொடுத்தனா். இதற்காக நில உரிமையாளா்களுக்கு ரூ.9.22 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மேலும், தொடா்ந்து பரந்தூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நில உரிமையாளா்களிடம் இருந்து நிலத்தை கையகப்படும் பணியில் தமிழ்நாடு தொழில் வளச்சி கழக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வளத்தூா் பொதுமக்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வளத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

இதனால் பரந்தூா் பசுமை விமான நிலைய திட்டத்துக்கு எதிரான போராட்டம் விரிவடைந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கட... மேலும் பார்க்க

வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் த... மேலும் பார்க்க

வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை

மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்ப... மேலும் பார்க்க

பெங்களூா்- தாம்பரம் குளிா்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பெங்களூா்-தாம்பரம் இடையிலான குளிா்சாதன வசதியுடைய பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அதிந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் ம... மேலும் பார்க்க

செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு பெற்றது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. வாயுபகவான் தனது சாபம் நீங்கிய பிறகு செவ்வ... மேலும் பார்க்க