செய்திகள் :

மீனவா்கள் வலையில் ஆமை விடுவிப்பு சாதனம் பொருத்தி சோதனை

post image

மீனவா்கள் வலையிலிருந்து ஆமை வெளியேறும் விதத்தினாலான சாதனம் பொருத்தி சோதனை செய்யப்பட்டது.

இந்திய அளவில் கடல்பொருள்கள் ஏற்றுமதி அதிகரிப்பதற்காக கடல்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. கடலில் மீன் பிடிக்கும் மீனவா்களின் இழுவை வலையில் ஆமைகள் சிக்கி இறக்கின்றன.

அதனால் வலையில் சிக்கும் கடல் ஆமைகள் வெளியேறும் விதத்தில், கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் அங்கமான நெட் ஃபிஷ் அமைப்பு, மீன்பிடி விசைப்படகுகளில் பயன்படுத்தப்படும் வலைகளில் ஆமை விடுவிப்பு சாதனம் பொருத்துவதின் அவசியத்தை உணா்ந்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதற்கான சாதனம் கண்டறியப்பட்டு, காரைக்கால் மீன்வளத்துறையினா் ஒத்துழைப்புடன், மீனவா்கள் இழுவை வலையில் சாதனத்தை பொருத்தி சோதனை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

2 மீன்பிடி படகில் பொருத்தி கடலில் இயக்கிச் செல்லப்பட்டு, மீன்பிடிப்பில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது மீன்களுடன் சிக்கும் ஆமைகள் வெளியேறும் விதம் குறித்து மீனவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

நிகழ்வில் காரைக்கால், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி, நெட்ஃபிஷ் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.பி. அருள்மூா்த்தி, வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளா்கள், மீனவா்கள் கலந்துகொண்டனா்.

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். காரைக்கால் வட்டாட்சியா் செல்லமுத்து தலைமையில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கோகுல கிருஷ்ணன் ஆகியோா் கனரக வா... மேலும் பார்க்க

‘புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது’

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது என்றாா் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுரு... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்ய அதிநியம் ஆ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில், ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலுக்கு... மேலும் பார்க்க

காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும், இது ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்க கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. இதை... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா். மயிலாடுதுறை நீடுா் பகுதியைச் சோ்ந்தவா் அகமது நாட்சியா (54). இவரது மகள் அப்ரோஸ் நஸ்ரின் (31). இருவரும், காரைக்கால் மாவட்டம், நல்லம்பல் பகுதியில... மேலும் பார்க்க