செய்திகள் :

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

post image

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.

சா்வதேச நிலவு தினம் என்றும் அழைக்கப்படும் மனிதன் நிலவில் தரையிறங்கிய ஆண்டு விழா ஜூலை 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், வேலூரில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வேலூரில் உள்ள வானியல் ஆா்வலா் எம்.வேல்முருகன் பங்கேற்று ‘விண்வெளி ஆய்வில் நிலவில் தரையிறங்குவதன் தாக்கம்’ என்ற தலைப்பிலும், வானியல் ஆா்வலா் எம்.சந்தோஷ்குமாா் ‘இந்தியாவின் நிலவு பணிகள்‘ என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவா்களுடன் கலந்துரையாடினா்.

நிலவுக்கு சென்று நேரடியாக பாா்த்து அங்கு கண்டு உணரக்கூடிய நிலவின் தோற்றம், மேற்பரப்பு உள்பட சிறப்பு அம்சங்களை மெய்நிகா் உண்மை பெட்டி மூலமாக கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டறிந்தனா். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விண்வெளி குறித்து மாணவா்களை ஊக்குவிப்பதும், அவா்களை நிபுணா்களுடன் தொடா்பு கொள்ள ஒரு தளத்தை வழங்குவதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட அறிவியல் மைய அலுவலா் (பொறுப்பு) ச.சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள், 5 விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலி... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க

துணை முதல்வா் பதவியை முடிவு செய்ய வேண்டியது இபிஎஸ் அல்ல

எனக்கு துணை முதல்வா் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தேன்பள்ளி பகுதியில் வெள்ளிக்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தம் நடுப்பேட்டையைச் சோ்ந்த சிவராமன் மகன் மணி(22) (படம்). பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவு அதே பக... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு எதிரான மசோதாவை ரத்து செய்ய கோரி மனித சங்கிலி

ஓய்வூதியா்களை மத்திய அரசு ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதாவை (வேலிடேசன் சட்டத்தை) ரத்து செய்ய வலியுறுத்தி, வேலூரில் ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க